ஹாய் ஃபிரென்ட்ஸ், 'உன்னைத் தானே' கதையுடைய ஒரிஜினல் எடிஷன் இது. இந்த வெர்ஷனுக்கும், "உன்னைத் தானே" வெர்ஷனுக்கும் சின்னதாக சில வித்தியாசங்கள் இருக்கிறது. என் பிரென்ட்ஸ் சிலருக்கு இந்த வெர்ஷன் பிடிக்கும். அதற்காக இதையும் பப்ளிஷ் செய்கிறேன். ஒருவேளை நீங்கள் "உன்னைத் தானே" கதையை படித்திருந்தால், என்ன வித்தியாசம் என்று தெரிந்துக் கொள்ள படியுங்கள், அல்லது ஸ்கிப் செய்து விடுங்கள் :-) நன்றி!
கதையைப் பற்றி:
கிராமத்து இளைஞன் சசி, சென்னையில் சிந்துவை பார்த்த உடனே காதல் கொள்கிறான்.
சிந்துவிற்கு திருமணம் நிச்சயமாகி இருப்பதை தெரிந்து சசி வருத்தம் அடையும் போதே, எதிர்பாராத விதமாக அவளை திருமணம் செய்துக் கொள்ளும் வாய்ப்பு அவனுக்கு கிடைக்கிறது. அதைத் தவறாமல் பயன்படுத்தியும் கொள்கிறான்.
ஆனால் அந்த திருமணம் சிந்துவிற்கு பிடிக்குமா? அவனின் பெற்றோர் அதை ஏற்றுக் கொள்வார்களா??
தெரிந்துக் கொள்ள கதையை படியுங்கள்!
Check out the Vilaketri vaikkiren story reviews from our readers.
குடும்பம், உறவுகள் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லாமல் ஒருவன். குடும்பமும் உறவுகளும் மட்டுமே ஜீவநாதமாக இருக்கும் குடும்பத்தில் இருந்து வந்த ஒருத்தி. இவர்கள் இருவரையும் இணைக்கும் காலம், அவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது உண்டாகும் மோதலும் காதலும் தான் இந்த 'முதன் முதலில் பார்த்தேன்".
மூங்கில் வனத்திற்கு மட்டும் என்ன சிறப்பு….? ஓசைக்கும் இசைக்கும் உள்ள வேற்றுமைதான். இங்கு உள்ள பச்சை மூங்கில்களில் வண்டுகள் குடைந்து இயற்கையாகவே பல புல்லாங்குழல்கள் உருவாகியிருக்கும். அங்கு காற்று அந்த துளைகளில் புகுந்து வெளிவரும்போது இனிய இசை வெளிப்படும்… வேணுகானம்!. சங்கின் ஓம்காரமும் வண்டுகளின் ரீங்காரமும் மூங்கிலின் குழலொலியும் ஆதியின் இயற்கை இசை என்று சொல்வதுண்டு. அதிலிருந்துதான் சப்தஸ்வரங்களும் ராகங்களும் உருவாகின.
ஒவ்வொரு மனமும் ஒரு வனம்தான். அதற்கென்று இசையை உருவாக்கி துடிக்கும்…. அது மௌனமாகி விட்டால்… உயிர்தான் இருக்கும் உயிர்ப்பு இருக்காது… இசையை மறந்து மௌனித்த இதயம் மீண்டும் இசைக்குமா?
துரோகத்தாலும் சதியாலும் உயிர் துறந்து மௌனமாக மாறிய ஒரு தேவதையின் கதை இது. நித்திலவல்லி மீண்டும் மானஸாவாக பிறப்பெடுத்தது பழி தீர்க்கவா… வேணுமாறன் மீது விழுந்த பழியை துடைக்கவா?. கதையை படிக்கலாமா?
அன்புடன்
சாகம்பரி
தலைப்பு: யானும் நீயும் எவ்வழி அறிதும்… அப்படியென்றால்… நானும் நீயும் எந்த வழியாக ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டோம்?... அதாவது இந்த காதல்தானே நம்மை இணைத்து வைத்தது. இருவருக்கிடையே அறிமுகம் ஏற்படவும்…அன்பு ஏற்படவும்… உறவு ஏற்படவும் ஏதாவது ஒரு ஆரம்பம் வேண்டுமல்லவா? அந்த ஆரம்பம் எது?
சில சமயம் உறவின் முறையில் இருக்கலாம்…
சில சமயம் நட்பின் அடிப்படையில் இருக்கலாம்..
அவர்கள் இருப்பிடத்தை பொறுத்தவரை அண்டைவீடு இருக்கலாம்.... அடுத்த தெருவாக இருக்கலாம்… பக்கத்து ஊராக இருக்கலாம்… அண்டை மாநிலமாக இருக்கலாம், அட, அடுத்த தேசமாகக் கூட இருக்கட்டுமே. ஆனால் அடுத்த உலகமாக இருந்தால்…
அச்சோ… உள்ளூர் காதல் கலவரத்தையே சமாளிக்க முடியவில்லை… இதில் இவர்களை எப்படி சமாளிப்பது?
ம்… புரிந்திருக்குமே? ஆமாம் இரண்டு வெவ்வேறு உலகங்களை சார்ந்தவர்கள் இணையும் கதைதான்…
பட்… ட்ரஸ்ட் மீ! மாறுபட்ட உலகின் வேறுபட்ட எதிக்ஸ்…. எண்ணங்கள்… அறிவியல் சிக்கல்கள்… வேற்றினத்தின் மீதான வெறுப்பு… இத்தனையும் தாண்டி எப்பவும் நம்ம ஓட்டு காதலின் வெற்றிக்குத்தான்!
அப்படியே ப்ளாக் ஹோல், வார்ம் ஹோல், பரலல் யுனிவர்ஸ், டைம் டைலேஸன் போன்ற விண்வெளி விசயங்களை தெரிந்து கொள்வோமா…
ஐன்ஸ்டைன் மற்றும் விண்வெளி இயற்பிலார் ஸ்டிஃபன் ஹாக்கின்ஸின் நிருபிக்கப்பட்ட… நிருபிக்கப்படாத.. தியேரிகளை உதவி கொண்டு ட்ராவல் செய்யலாமா?.
அன்புடன்
சாகம்பரி