Online Books / Novels Tagged : Chillzee_Originals - Chillzee KiMo

கற்றுக் கொடு கண்ணாலே... - Chillzee Originals

Second edition.

காதலை கற்றுத் தந்து படிக்க முடியுமா??

இந்த நாவலின் கதாநாயகியுடன் பயணம் செய்து நாமும் தெரிந்துக் கொள்வோம்!

இது ஒரு எளிய, இனிய காதல் கதை!

Published in Books

மலரே ஒரு  வார்த்தைப் பேசு...  இப்படிக்கு  பூங்காற்று...! - பிந்து வினோத்

Second edition.

மலருக்கும் பூங்காற்றுக்கும் நடுவே காதல் வரும்... ஊடல் வருமா???

ம்மாவிடம் அனுமதி வாங்காமல் திடீரென சுவாதியை திருமணம் செய்து வருகிறான் விஷாகன்.

திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் ஆன நிலையில் சுவாதி கணவனை பிரிந்து சிதம்பரம் - பத்மாவதி தம்பதிகள் வீட்டில் தங்கி இருக்கிறாள்.  சிதம்பரத்தின் அம்மா ருக்மணி தவிர அந்த குடும்பத்தில் அனைவருமே அவளை அவர்களில் ஒருத்தியாகவே நடத்துகிறார்கள். விஷாகன் தன்னை தேடி வருவான் என ஒவ்வொரு நாளும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறாள் அவள்...

விஷாகனிடம் சுவாதி தானாகவே வீட்டை விட்டு சென்று விட்டதாக சொல்லி விட்டு, உண்மையில் நடந்ததை சொல்லாமல் மறைக்கிறார்கள் அவனின் அம்மா விஜயாவும், தங்கை விஷ்ணுப்ரியாவும்.

மனைவி பிரிந்து சென்றதற்கு காரணம் புரியா விட்டாலும், மனதில் வலியுடன் அவளை தேடிக் கொண்டிருக்கிறான் விஷாகன்...!

பிரிந்தவர்கள் இணைவார்களா???

அவர்களின் பிரிவுக்கான காரணம் விஷாகனுக்கு தெரிய வருமா???

தெரிந்துக் கொள்ள கதையை படியுங்கள்!

 

 

Published in Books

வெற்றியின் செல்வி - Chillzee Originals

Second edition.

காதல் - எப்போது, எப்படி, யாரிடம் வரும் என்பது யாருக்கு தெரியும்.

இந்த கதையின் கதாநாயகி அந்த காதலை உணரும் பொழுதை நாமும் அவளுடன் சேர்ந்து தெரிந்துக் கொள்வோம்.

வெற்றியின் செல்வி எனும் இந்த காதல் கதை, ஒரு ஜனரஞ்சகம் நிறைந்த காதல் + குடும்ப கதை.

Published in Books

வெண்ணிலவு எனக்கே எனக்கா...! - Chillzee Originals

Second edition.

 

ஹரீஷ் அவனுடைய பெற்றோருக்கு ஒரே மகன். தன்னுடைய அறிவால் உருவாக்கி இருக்கும் ரோபோட்டை பிரபலப்படுத்தியப் பிறகு தான் கல்யாணம் என்ற முடிவுடன் இருப்பவன்.

ஹரீஷின் அமைதியான "பேச்சலர்" வாழ்க்கையில் புயலென வருகிறாள் நிலா. அவளின் இனிமை நிறைந்த அறிமுகம் ஹரீஷின் கொள்கைகளை ஆட்டம் காண செய்கிறது!

காதல் தோல்வியினால் வருத்தத்தில் இருக்கும் நிலாவிற்கும் ஹரீஷின் அறிமுகம் பிடித்திருக்கிறது.

எதிர்பாராமல் அவர்களுக்குள் திருமணம் நடந்து விட, ஹரீஷின் மனம் அவனின் ரோபோட்டிடம் இருந்து மனைவி பக்கம் தடம் மாறுகிறது.

ஆனால் நிலா ஹரீஷை விட்டு விலகியே இருக்கிறாள்.

ஹரீஷின் கனவு நிறைவேறியதா? ஹரீஷ் - நிலா வாழ்க்கை என்ன ஆனது? என்பதை "வெண்ணிலவு எனக்கே எனக்கா' நாவல் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

 

Published in Books

மலையோரம் வீசும் காற்று - பிந்து வினோத்

Second edition.

அமெரிக்காவில் வாழும் ரச்னாவும் – திருநெல்வேலியில் ஒரு சிறிய கிராமத்தில் வாழும் விசாலினியும் சந்தித்தால்...

மலையோரம் வீசும் காற்று - நட்பால் இணைவோம்...!

நட்பு, காதல், குடும்பம், பிரச்சனைகள் என அனைத்தையும் இதமாய் அரவணைத்து செல்லும் நாவல்.



Published in Books