Online Books / Novels Tagged : Drama - Chillzee KiMo

இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - சசிரேகா

முன்னுரை
நிறைய வீடுகள்ல பெண் குழந்தைங்க சின்ன வயசா இருக்கறப்பவே இவன்தான் உன் மாமன் இவனைதான் நீ கல்யாணம் பண்ணிக்கனும்னு சொல்றதும், பையன்கள் கிட்ட இவள்தான் உன் பொண்டாட்டி, இவளைத்தான் நீ கல்யாணம் பண்ணிக்கனும்னு பெரியவங்க சொல்லி வளர்ப்பாங்க, அதே போல பெண் வயதுக்கு வந்தால் அவளுக்கு முறை செய்பவனைத்தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு பெரியவங்க சொல்லி வைப்பாங்க
இதை கேட்டு கேட்டு வளர்ற குழந்தைங்க மனசுல ஆழமா அந்த எண்ணம் பதிஞ்சிடுது, முதல்ல இப்படி சொல்லாம பெரியவங்க வளர்த்திருக்கனும், இல்லைன்னா குழந்தைகள் பெரியவங்களான பின்னாடி பெரிய பிரச்சனைகள் ஏற்படும், இதனால் எத்தனையோ பேர் அவமானப்படறாங்க, சொந்தங்களில் பிளவு ஏற்படுது, அப்படியொரு நிகழ்வினால் உருவாக்கப்பட்ட கற்பனை கதையே இக்கதை. இக்கதையில் வரும் கதாபாத்திரங்கள் யாரையும் குறிப்பிடுபவன அல்ல. இக்கதைக்களம் முழுக்க முழுக்க கற்பனையானது. இக்கதை யார் மனதையும் புண்படுத்த எழுதவில்லை.

Published in Books

ஆனந்தம் எனக்கேது அன்பே நீயில்லாது - சசிரேகா

சசிரேகாவின் புது நாவல். 

Published in Books

தாபங்களே… ரூபங்களாய்… - சசிரேகா

முன்னுரை
முற்பிறவியில் முக்தியடையாமல் நிறைவேறாத ஆசைகளுடன் இறந்துப் போன பெண் ஆன்மா ஒன்று மறுபிறவியில் பிறந்த நாயகியின் மூலம் தனது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் தனது ஆன்மாவிற்கு முக்தி கிடைக்கவும் செய்யும் போராட்டங்களால் நாயகிக்கு ஏற்பட்ட சோதனைகளும் நாயகன் அடைந்த பிரச்சனைகளும் அதோடு அந்த ஆன்மாவின் நிலைமை என்னவானது மற்றும் நாயகனும் நாயகியும் இறுதியில் என்னவானார்கள் என்பதை சொல்லும் கதையாகும். இக்கதை ஒரு பேய் கதை போன்று இருந்தாலும் இது ஒரு நல்ல ஆன்மாவின் காதல் கதையாகும் முற்பிறவியில் பிரிந்த காதலர்கள் இப்பிறவியில் சேர்ந்தார்களா சேர்ந்த போது ஏற்பட்ட நிகழ்வுகளின் தொகுப்பை கதையாக வடித்துள்ளேன் நன்றி 

Published in Books

உறவென்று வந்த காதல் - சசிரேகா

முன்னுரை
தன் தாயின் காதல் திருமணத்தால் பிரிந்து தனித்தனியாக விலகிச் சென்ற தாய் வழி உறவுகளின் குடும்பங்களை ஒன்று சேர்க்க கதாநாயகி எடுத்த சபதத்தால் அவள் நாயகனுடன் சேர்ந்து அவளுக்கு நடக்கும் பிரச்சனைகளையும் அவற்றை எவ்வாறு கடந்து போராடி பிரிந்த குடும்பங்களை ஒன்று சேர்க்கிறாள் என்பதுமே இக்கதையின் கருவாகும்.

Published in Books

தேடி உனைச் சரணடைந்தேன்..... - ஸ்ரீஜா வெங்கடேஷ்

தேடி உன்னைச் சரணடைந்தேன் என்னும் இந்த நாவல் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள், பெண்களின் நிலை, இன்றும் பெண்களை சில குடும்பத்துப் பெரியவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? போன்றவற்றை மையமாகக் கொண்டது.

பெரிய குடும்பத்தில் பிறக்கும் கடைசி மகன்கள் ஒன்று சிறு குழந்தை என்று ஒதுக்கப்படுவார்கள் அல்லது மிக அதிக செல்லம் கொடுத்துக் கெடுக்கப்படுவார்கள். இங்கே நமது நாயகன் செந்தில் குமரன் பாவம் ஒதுக்கப்படுகிறான். அவனை தகப்பனே மதிக்கவில்லை எனில் உடன் பிறந்த அண்ணன்கள் எங்கே மதிப்பார்கள்? அவர்களது மனைவிமார்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. ஆனால் பாவம் செந்திலுக்கு தான் ஒதுக்கப்படுகிறோம் என்பதோ, தனக்குப் பெரிய மரியாதை இல்லை குடும்பத்தில் என்பதோ தெரியவில்லை அவன் வாழ்க்கையில் பெண் என ஒருத்தி வரும் வரையில். அவளும் தகப்பனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண். அதுவும் எதற்கு? பழி வாங்க. இது எதுவும் செந்திலுக்குத் தெரியாது. சந்தோஷமாக ஆரம்பிக்கும் அவன் மண வாழ்க்கையில் பல சூறாவளிகள், சதிகள். தம்பதிகள் பிரிந்து வாழும் நிலை. இறுதியில் என்ன ஆனது?

சிவகுர் எனப்படும் பண முதலை தன் கடைசி மகனின் திறமைகளை, அவன் ஆசைகளைப் புரிந்து கொண்டாரா? பெண்களும் மனிதப்பிறவிகள் தான். அவர்களுக்கும் ஆசா பாசங்கள், சாதிக்கும் ஆசை எல்லாம் இருக்கும் என உணர்ந்தாரா? அப்படியே உணர்ந்தாலும் காலம் கடந்து விட்டதோ?

படித்துத் தெரிந்து கொள்ளுங்கள் "தேடி உன்னைச் சரணடைந்தேன்"

Published in Books