Online Books / Novels Tagged : Family - Chillzee KiMo

உன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா சுப்பையா

பிரேமாவின் எழுத்தில் இன்னுமொரு அழகிய காதல் கதை!

 

Published in Books

எங்கே எனது கதை?? - பத்மினி  செல்வராஜ்

Hi Friends,

என் கதைகளை படித்து ஆதரவும் உற்சாகமும் அளித்து வரும் உங்களுக்கு நன்றி...

நம் வாழ்வின் எந்த ஒரு நிலையையும் படிப்படியாகத்தான் கடக்க முடியும்... உதாரணமாக, பள்ளி பருவத்தில் LKG ல் ஆரம்பித்து படிப்படியாக முன்னேறி பின் கல்லூரி அதன் பின் வேலை என்று முன்னேறுவதைப் போல, ஒரு எழுத்தாளரும் முதலில் ஆரம்பிப்பது சிறுகதை  எழுதுவதில்...

அதே போல நானும் இந்த எழுத்துலகில் அடி எடுத்து வைக்கும் பொழுது சிறுகதை எழுத்தாளராக உள்ளே நுழைந்தேன்... அப்படி எழுதிய சிறுகதைகளில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி...!!! 

இந்த கதைகளையும் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்...

Hope you like my short stories as well.. Happy Reading!!!

- அன்புடன் பத்மினி

 

Published in Books

என்னை ஏதோ செய்துவிட்டாய் - ராசு

நெஞ்சுக்குள் நீ மட்டும். எல்லாம் மறந்தேன். எனை என்ன செய்தாய்!!!

இனிய காதல் கதை.

Published in Books

மாலையில்  யாரோ மனதோடு  பேச...! - பிந்து வினோத்

Chillzeeயில் என்றென்றும் உன்னுடன் - 01 என்ற பெயரில் தொடராக வந்த கதை இது.

சிறிய தொழிற்சாலை ஒன்றின் முதலாளியான கோபி, தன் மனைவி சரண்யா மற்றும் ஒரு வயது குழந்தை நிஷாவுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறான்.

எதிர்பாராத விதமாக ஒரு சாலை விபத்தில் கோபி இறந்து விட, சரண்யா அவனின் தொழிற்சாலையை எடுத்து நடத்துகிறாள். அனுபவமின்மையாலும், தொழிற்சாலையில் வேலை செய்பவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணத்தாலும் வரும் லாபத்தை தொழிற்சாலைக்கு என்று எடுத்து வைக்காமல் செலவிடுகிறாள் சரண்யா.

மூன்று ஆண்டுகள் செல்ல, தொழிற்சாலைக்கு என்று முன்பு வாங்கி இருந்த கடன் பெரிதாக வளர்ந்து பயமுறுத்துகிறது. குடும்ப நண்பராக இருக்கும் சேகர் தவிர உறவினர் யாருடைய துணையும் இல்லாமல் இருக்கும் சரண்யா, தொழிற்சாலையை விற்க முடிவு செய்கிறாள்.

சிங்கப்பூரில் இருந்து யார் மீதோ பழி உணர்ச்சியுடன் பல வருடங்களுக்கு பின் வந்திருக்கும் மித்ரன், அந்த தொழிற்சாலையை வாங்குகிறான். அங்கே பணிபுரிபவர்கள் சரண்யா மீது காட்டும் அன்பும், பணிவும் கோபத்தை தர, சரண்யா மீது எரிந்து விழுகிறான். கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் மற்றவர் முன்னிலையில் அவளை அவமானப் படுத்துகிறான்.

இது போன்ற காரணமற்ற கோபத்தை சந்தித்து பழகி இராத சரண்யா திகைத்து போகிறாள். என்ன செய்வது என்று குழம்பும் போது, முன்பு கோபி கொடுத்த விசிடிங் கார்ட் கண்ணில் பட, அதில் இருக்கும் முகவரிக்கு சென்று மைத்ரேயியை சந்தித்து உதவி கேட்கிறாள்.

சரண்யாவிடம் தோழி போல பேசும் மைத்ரேயி, மித்ரன் எனும் பெயரை கேட்டு அதிர்ச்சி ஆகிறாள்...!

ரண்யாவின் வாழ்க்கை என்ன ஆனது? மைரேயிக்கும் மித்ரனுக்கும் நடுவே இருக்கும் உறவு என்ன? மித்ரன் இப்படி இருக்க காரணம் என்ன?

தெரிந்துக் கொள்ள கதையைப் படியுங்கள் :-)

 

Published in Books

ஒரு கூட்டுக் கிளிகள் - ராசு

இதுவரை காதலை மையப்படுத்தி அதனுடன் இணைந்த குடும்பப் பிரச்சினைகளையும் பற்றி கூறினேன். இந்த கதையில் காதல் என்பது இருக்கும். ஆனால் அதை நான் மையப்படுத்தவில்லை.

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘படிக்காதவன்’ (தமிழில் இரண்டு படங்கள் இருப்பதால் நடிகர்களை குறிப்பிட்டுள்ளேன்) படத்தில் வரும் ‘ஒரு கூட்டுக் கிளியாக’ என்ற பாடல் சகோதரர்களின் பாசத்தை பார்ப்பவர்களுக்கு உணர்த்தும். நான் சொன்ன அந்த வரி எனக்கு பிடித்திருந்தது.

அதனால் நான் சகோதரிகளைப் பற்றி சொல்லப்போகும் இந்தக் கதையின் தலைப்பை ‘ஒரு கூட்டுக் கிளிகள்’ என்று வைத்திருக்கிறேன்.

அந்த சகோதரிகள் உங்களை கதையில் சந்திக்க வருகிறார்கள்.

நன்றி!

Published in Books