உன்னை ஒன்று கேட்பேன் என்ற இந்த நாவல், வாழ்க்கைப் பாதையில் நாம அபூர்வமாக சந்திக்கும் அற்புதமான சில மனிதர்களைப் பற்றியது.
ரஞ்சனி என்னும் அழகிய இளம் பெண்ணின் காதல், சாராதா என்னும் அன்னையின் தியாகம் இவைகள் இந்த நாவலை மெருகேற்றுகின்றன.
ஸ்ரீனிவாசன் யார்?
சாரதாவின் வாழ்க்கையில் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன?
மேலோட்டமாக மகிழ்ச்சியாக வாழும் சாரதா, இரவு நேரங்களில் எதை நினைத்து வருந்துகிறாள்?
ரஞ்சனிக்குத் தெரியக் கூடாது என எதை மறைக்கிறாள்?
கொலைக்குற்றத்துக்கு தண்டனை அனுபவிக்கும் ஸ்ரீனிவாசன் சாரதாவுக்கு ஏன் கடிதம் எழுத வேண்டும்?
இப்படிப் பல மர்மங்களும் ரகசியங்களும் நிறைந்த கதை தான் “உன்னை ஒன்று கேட்பேன்”.
இளவரசி ரோஹினி பிடிக்காத திருமணத்தில் இருந்து தப்பிக்க சென்னைக்கு வருகிறாள். அங்கே தான் யார் என்று சொல்லாமல் சாரதாவின் வீட்டில் தங்குகிறாள். அப்போது சாரதாவின் மகன் அஜய் மீது காதல் வசப் படுகிறாள். அவள் யார் என்ற உண்மை தெரிந்தால் அஜய் என்ன நினைப்பானோ என்ற கலக்கத்தில் உண்மையை சொல்லாமல் மறைக்கிறாள். அவள் பயத்தை நிஜமாக்குவதுப் போல அவள் மறைத்து வைத்த அரச வாழ்வு அவளை தேடி வந்து சேருகிறது.
அஜய்க்கு உண்மை தெரிந்ததா? ரோஹினி அரசக் குடும்பத்திற்கான கடமையை ஏற்றுக் கொள்வாளா அல்லது அஜய் மீதான காதலை தொடர்வாளா?
காதல் - எப்போது, எப்படி, யாரிடம் வரும் என்பது யாருக்கு தெரியும்.
இந்த கதையின் கதாநாயகி அந்த காதலை உணரும் பொழுதை நாமும் அவளுடன் சேர்ந்து தெரிந்துக் கொள்வோம்.
வெற்றி'யின் செல்வி எனும் இந்த காதல் கதை, ஒரு ஜனரஞ்சகம் நிறைந்த காதல் + குடும்ப கதை.
கதையைப் பற்றி கொஞ்சம் உங்களுடன்
அமுதநிலா. தன் குடும்பத்தின் நலனைப் பெரிதாக எண்ணுபவள். உடன் பிறந்தோரின் சுயநலம் புரியாமல், தன்னைப் பற்றி யோசிக்காமல் அவர்களுக்காக ஓடாய் தேயும் அன்பு தேவதை.
இளங்கனியன். தொழில் வட்டாரத்தில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் இளம் தொழிலதிபர், மகன் மேல் உயிரையே வைத்திருக்கும் அன்புத் தந்தை.
மகனிற்கு கனியமுதன் என்று பெயரிட்டு அமுதா அமுதா என்று அன்புடன் அழைக்கும் அவனைப் புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கும் கண்ணம்மா.
பிடிக்காத திருமணப் பந்தத்தில் தள்ளப்பட்ட கண்ணம்மாவை மனதார நேசிக்கும் பிரபு.
இவர்களைச் சுற்றி நடப்பதுதான் கதை.
இவர்கள் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதை "தொலைந்து போனதுஎன் இதயமடி" படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
என்றென்றும் அன்புடன்
ராசு