Chillzee

Chillzee

Social Profiles

Facebook Instagram Pinterest

Mathiyur Mysteries Series - Novel # 01 | A Sathya & Shakti Mystery Novel.

   

Second edition.

முன்னுரை.

மதியூர் மிஸ்டரீஸ் கதைகளின் தொடக்கப் புள்ளியான இந்தக் கதை, மதியூர் எனும் கற்பனைக் கிராமத்தில் நிகழ்வது. இந்தக் கதைகளில் "இன்ஸ்பெக்டர் தேன்" கதையில் நமக்கு அறிமுகமான மதியூர் கிராமம், இன்ஸ்பெக்டர் தென்றல்வாணன் மற்றும் அவனின் மனைவி சத்யா மீண்டும் முக்கிய பங்கு வகிக்கப் போகிறார்கள்.

அவர்களுடன் மதியூர் மிஸ்ட்ரீஸ் கதைகளின் ஒரு கதாநாயகியான சக்தியும் இந்த கதையில் நமக்கு அறிமுகம் ஆகப் போகிறாள்.

  

'இன்ஸ்பெக்டர் தேன்' படிக்காதவர்களுக்காக ஒரு க்விக் இன்ட்ரோ:

இன்ஸ்பெக்டர் தேன் என்று அழைக்கப்படும் தென்றல்வாணன் நேர்மையான போலீஸ் அதிகாரி. தன் குடும்பத்தின் நலத்திற்காக அமைதியான கிராமம் என அவன் கருதும் மதியூருக்கு மாற்றல் வாங்கி வந்தவன்.

தென்றல்வாணனின் மனைவி சத்யா அவனுக்கு வீட்டிலும், வேலையிலும் ஆதரவாக இருப்பவள். தென்றல்வாணன் சத்யாவின் ஒரே மகள் ஷாலினி!

   

மதியூர் மிஸ்ட்டரீஸ் - 01 - ஒரு கிளி உருகுது...! - Chillzee Originals 

கதையைப் பற்றி:

மதியூர் எனும் அமைதியான கிராமத்தில் நிகழ்ந்த ஒரு மரணம், கொலையா விபத்தா என்று தெளிவில்லாமல் இருக்கிறது. ஊரில் இருக்கும் பலரும் நடந்தது கொலை, அதற்கு காரணம் அஹல்யா என்று நம்புகிறார்கள். அஹல்யாவை பற்றி பலரும் பலவிதமான தவறான செய்திகளை சொல்கிறார்கள்.

ஆனால், அஹல்யா நல்லவள் என்று நம்புகிறான் அபினவ். அவளை திருமணம் செய்துக் கொள்ளவும் விரும்புகிறான்.  எதனால் அஹல்யாவை பற்றி தவறான செய்தி பரவியது என்று அவன் கண்டுப்பிடிக்க உதவுகிறாள் சத்யா. அவளுடைய புதிய தோழி சக்தியும் அவளுக்கு உதவுகிறாள். அஹல்யா உண்மையில் நல்லவள் தானா? அஹல்யா சம்மந்தப்பட்டதாக சொல்லப்படும் மரணம், கொலையா விபத்தா??

'கண்ணால் காண்பது பொய்' என்பது எப்போதும் உண்மையா?

நம் கதாநாயகிகளுடன் பயணம் செய்து நாமும் தெரிந்துக் கொள்வோம்.

இது ஒரு குடும்பம் - காதல் -  மர்மம் நிறைந்த கதை!

கற்றுக் கொடு கண்ணாலே... - Chillzee Originals

Second edition.

காதலை கற்றுத் தந்து படிக்க முடியுமா??

இந்த நாவலின் கதாநாயகியுடன் பயணம் செய்து நாமும் தெரிந்துக் கொள்வோம்!

இது ஒரு எளிய, இனிய காதல் கதை!

வெற்றியின் செல்வி - Chillzee Originals

Second edition.

காதல் - எப்போது, எப்படி, யாரிடம் வரும் என்பது யாருக்கு தெரியும்.

இந்த கதையின் கதாநாயகி அந்த காதலை உணரும் பொழுதை நாமும் அவளுடன் சேர்ந்து தெரிந்துக் கொள்வோம்.

வெற்றியின் செல்வி எனும் இந்த காதல் கதை, ஒரு ஜனரஞ்சகம் நிறைந்த காதல் + குடும்ப கதை.

வெண்ணிலவு எனக்கே எனக்கா...! - Chillzee Originals

Second edition.

 

ஹரீஷ் அவனுடைய பெற்றோருக்கு ஒரே மகன். தன்னுடைய அறிவால் உருவாக்கி இருக்கும் ரோபோட்டை பிரபலப்படுத்தியப் பிறகு தான் கல்யாணம் என்ற முடிவுடன் இருப்பவன்.

ஹரீஷின் அமைதியான "பேச்சலர்" வாழ்க்கையில் புயலென வருகிறாள் நிலா. அவளின் இனிமை நிறைந்த அறிமுகம் ஹரீஷின் கொள்கைகளை ஆட்டம் காண செய்கிறது!

காதல் தோல்வியினால் வருத்தத்தில் இருக்கும் நிலாவிற்கும் ஹரீஷின் அறிமுகம் பிடித்திருக்கிறது.

எதிர்பாராமல் அவர்களுக்குள் திருமணம் நடந்து விட, ஹரீஷின் மனம் அவனின் ரோபோட்டிடம் இருந்து மனைவி பக்கம் தடம் மாறுகிறது.

ஆனால் நிலா ஹரீஷை விட்டு விலகியே இருக்கிறாள்.

ஹரீஷின் கனவு நிறைவேறியதா? ஹரீஷ் - நிலா வாழ்க்கை என்ன ஆனது? என்பதை "வெண்ணிலவு எனக்கே எனக்கா' நாவல் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

 

நான் என்பதே நீ தானடி - Chillzee Originals

காதலை கற்றுத் தந்து படிக்க முடியுமா??

இந்த நாவலின் கதாநாயகியுடன் பயணம் செய்து நாமும் தெரிந்துக் கொள்வோம்!

இது ஒரு எளிய, இனிய காதல் கதை!

Page 1 of 4