Srija Venkatesh

Srija Venkatesh

கனவுப் பூக்கள்... - ஸ்ரீஜா வெங்கடேஷ்

எத்தனை பேர் எப்படிச் சொன்னாலும் அலுக்காத விஷயம் காதல். கனவுப்பூக்கள் என்ற இந்த நாவல் கூட காதலைத்தான் பேசுகிறது.

ஆனால் இது கண்மூடித்தனமான, சுயநலமான காதல் இல்லை. கடமைக்காவும், தாயன்புக்காகவும் காதலை விட்டுக்கொடுக்க முன் வரும் நாயகி அகிலா.

அனாதையான தனக்கு தாயன்பு கிடைக்க வேண்டும் என மகன்களால் கைவிடப்பட்ட வயதான பெண்மணிகளுக்காக இல்லம் நடத்தும் நாயகன் ஆனந்த். தனக்கென ஒரு குடும்பம், மனைவி, அழகான குழந்தை என வாழ ஆசைப்படும் அவன் கனவு.

இந்த இரு வித்தியாசமான இளைஞர்களைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கிறது கனவுப்பூக்கள் நாவல்.

அகிலாவின் தாய் ராதாவுக்கு என்ன பிரச்சனை? அவள் ஏன் காதல் என்றாலே வெறுக்கிறாள்? பயப்படுகிறாள்? அகிலாவின் தந்தை ஏன் அவர்களை விட்டுப் போனார்?

இது போன்ற பல கேள்விகளுக்கு பதிலாக இருக்கிறது கனவுப்பூக்கள் நாவல். படித்து விட்டு உங்கள் கருத்தை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் வாசகர்களே!

   

வழி காட்டும் விண்மீன்கள்.... - ஸ்ரீஜா வெங்கடேஷ்

காதலும் குடும்பமும் இரு கண்கள் போன்றவை. காதலுக்காக பெற்றவர்களை விட முடியாது. அதே நேரம் இதயத்தில் வாழும் காதலியை மறக்கவும் முடியாது.

நாரயணன் என்னும் இளைஞன் அது போன்ற ஒரு சூழலில் என்ன செய்கிறான்?

காதலால் அவன் குடும்பம் அழிந்ததா? இல்லை குடும்பத்துக்காகக் காதலை விட்டானா?

அவனது ஒன்று விட்ட சகோதரனின் தொல்லைகளை எப்படி சமாளித்தான்? அவை எல்லாம் எளிதில் நடந்ததா? எவ்வளவு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டான் அவன்? ஆனாலும் மனம் தளரவில்லேயே நாராயணன்?

வழி காட்டும் விண் மீன்கள். காதலும் குடும்பமும் கலந்து எழுதப்பட்ட சமூக நாவல். இன்றைய இளைஞர்களின் பொறுப்பும், அன்பும் அக்கறையும் அழகாக எடுத்தாளப்பட்டிருக்கிறது. 

படித்து விட்டுக் கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!

நிலவே நீ சாட்சி... - ஸ்ரீஜா வெங்கடேஷ்

நிலவே நீ சாட்சி...என்னும் இந்த நாவல் அருணா என்னும் இளம்பெண்ணின் கதையைப் பேசுகிறது.

அவளது வாழ்வில் எல்லாமே இருந்தும் தாய் இல்லை என்ற குறை அவளை வாட்டுகிறது. அத்தையும் மாமாவும் ஏன் அவளது தகப்பனுமே அவளது தாயைப் பற்றிப் பேச மறுக்கிறார்கள். உயிரோடு இருக்கிறாளா? இல்லையா? என எதுவுமே தெரியவில்லை அருணாவுக்கும் அவளது தம்பி விஜய்க்கும். அருணாவுக்குக் காதலும் வர அதனைக் கொண்டாடுகிறாள். ஆனால்?

காதலன் சிவா வீட்டில் தாயறியாத பெண்ணை ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார்கள். தந்தையிடமிருந்து எப்படியாவது தாயைப் பற்றிய செய்திகளைக் கண்டறிந்து கொள்ள வேண்டும் என பெரும் முயற்சி செய்கிறார்கள் தமக்கையும் தம்பியும். மாமனும் அத்தையும் வில்லங்களாக மாற அவர்களைக் கூட தூக்கியெறியத் துணிகிறார்கள்.

அவர்களது தாய் யாரெனத் தெரிந்ததா? தாயன்பு அவர்களுக்குக் கிடைத்ததா? காதல் கை கூடியதா?

அருணாவின் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்து கொள்ளப் படியுங்கள்.."நிலவே நீ சாட்சி...".

என் மேல் விழுந்த மழைத்துளியே! - ஸ்ரீஜா வெங்கடேஷ்

காதல் கலந்து சொல்லப்பட்ட நாவல் இது.

இரு இளம் மருத்துவர்கள் விக்னேஷும், சுமதியும். இருவரது கண்ணோட்டங்கள், லட்சியங்கள் எல்லாமே முற்றிலும் மாறானவை. விதி இவர்கள் இருவரையும் திருமணம் என்ற பந்தத்தில் இணைக்கிறது.

இருவரது ஈகோவும் முட்டிக்கொள்கிறது. அவற்றை ரகு என்னும் கயவன் விசிறி விடுகிறான். தனது திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள சுமதியை தன்னுடையவளாக்கிக் கொள்ள என்னென்ன உண்டோ அத்தனையும் செய்கிறான். ஒரு கட்டத்தில் சுமதி அவன் விரித்த வலையில் நன்றாகவே சிக்கிக் கொள்கிறாள். 

அவள் மீண்டாளா? விக்னேஷ் சுமதி திருமணம் நிலைத்ததா? இருவரில் யார் நல்ல மருத்துவர் என்ற கேள்விக்கு விடை கிடைத்ததா?

படித்துப் பாருங்கள் "என் மேல் விழுந்த மழைத்துளியே!" நாவல்!  

Page 1 of 5