எஸ்.கே - நம் கதையின் கதாநாயகன்!
35 வயதை தாண்டியப் பிறகும் திருமணம் வேண்டாம் என்று இருக்கும் பேச்சலர். அண்ணா, அண்ணி, அவர்களின் குழந்தைகள் தான் அவனின் உலகம்.
அப்படி திருமணமே வேண்டாம் என்றிருக்கும் எஸ்.கே, 'பாஸ்' போல கறாராக தொட்டும் தொடாமல் பேசும் நந்தினியை பார்த்த உடனேயே காதல் வசப் படுகிறான்!
முதலில் மற்றவர்களைப் போல அவனையும் தள்ளியே வைக்கும் நந்தினி, மெல்ல மெல்ல அவனின் காதலை அங்கீகரிக்கிறாள்.
ஊடல், சண்டை, சச்சரவு இல்லாத காதலில் சுவாரஸ்யம் எது?
நந்தினி - எஸ்.கே காதலில் ஸ்ரேயா ஆ்தித்யா கல்யாணத்தின் வழியே கருத்து வேற்றுமையும், ஊடலும் ஏற்படுகிறது.
யாரிந்த ஆதித்யா, ஸ்ரேயா??? எதனால் அவர்களின் திருமணம் எஸ்.கே, நந்தினியை தொந்தரவு செய்கிறது?
தெரிந்துக் கொள்ள கதையை படியுங்கள்!
நம் மனம் கவர்ந்த எஸ்.கே - நந்தினி ஜோடியின் இந்த காதல் டூ கல்யாணம் பற்றி படிக்கலாம் வாங்க!!!!
இது ஒரு காதல் கதை ஃபிரென்ட்ஸ்!
என்ன, வித்தியாசமாக திருமணத்திற்குப் பின் வரும் காதலை சொல்லும் கதை!
பலக் கதைகள் எழுதினாலும் சில கதைகள் மனதிற்கு நெருக்கமானவை! அப்படி எனக்கு பிடித்த ஒருக் கதை இந்தக் கதை. படித்து ரொம்ப நாட்கள்... ஹுஹும் வருடங்கள் ஆகி விட்டது...!!!! மீண்டும் படித்தப் போது முதல் முறை எழுதி முடித்தப் போது ஏற்பட்ட அதே ஃபீல்! அதே ஸ்மைல்!
உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன் :-)
ஒவ்வொரு கதையையும் ஒவ்வொரு செட்டிங்கில் எழுதுவது பெரிய சவால் தான்... ஆனால் அந்த சவால் தான் எழுதும் செயல்முறையை எனக்கு இன்னும் எக்ஸ்ட்ரா இன்ட்ரஸ்டிங் ஆக்குவதும் கூட!!! :-)
அப்படி யோசித்து, நான் முன்பு விளையாடிய ஒரு வுமன்ஸ் கிரிக்கெட் லீக் அனுபவத்தை வைத்து எழுதிய ‘கற்பனை’ காதல் கதை தான் இந்தக் கதை!
இது ஒரு ஜாலி கோ ரவுன்ட் கதை :-) ஸ்வரூப் & மதுவின் காதல் கதையை சொல்லும் கதை!
ரொம்ப லாஜிக் எல்லாம் எதிர்பார்க்காதீங்க... :-) ஒரு ஸ்வீட் லவ் ஸ்டோரின்னு நினைச்சுப் படிங்க :-)