முன்னுரை
நன்றி என்ற சொல்லை பலருக்கு சொல்ல கடமைபட்டிருக்கலாம் ஆனால் தேவைக்கேற்ப மட்டுமே சிலருக்கு நன்றியுரைப்போம் சிலருக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லாத காரணத்தால் சொல்லமாட்டோம் ஆனால் நன்றியானது சரியான நேரத்தில் சரியான நபரிடம் சொல்லப்படுமானால் அந்த நன்றியின் மதிப்பும் அதை சொல்பவரின் மதிப்பும் உயரும் என்பதை கருவாக வைத்து இக்கதையை எழுதியுள்ளேன்.
முன்னுரை
யதார்த்தமான வாழ்வு வாழும் நாயகனது வாழ்க்கையில் திடீரென புயல் போல பிரச்சனை வந்ததால் அவனது வாழ்க்கையின் பாதையே திசைமாறியது அவனை சரியான பாதைக்கு கொண்டு வர முயற்சி செய்யும் நாயகியின் கதைதான் இது
முன்னுரை
வாழ்க்கையை தன் விருப்பம் போல வாழ நினைக்கும் நாயகனுக்கு வாழ்க்கை என்றால் இப்படித்தான் வாழவேண்டும் என புரிய வைத்த நாயகிக்கும் இடையே மலர்ந்த காதல் கதைதான் இக்கதை
முன்னுரை
உறவின் பிரிவு என்பது எந்த வயதிலும் நிகழலாம். ஆனால் அந்த உறவை கடைசி வரையில் காப்பாற்ற போராடுவது அந்த போராட்டத்தில் பல இன்னலங்கள் வந்தாலும் முன்னேறிச் செல்வதுதான் இக்கதையின் கருவாகும்.
நாயகியின் காதலுக்காக நாயகன் நடத்தும் போராட்டத்தில் வெற்றி கிடைத்ததா இல்லையே என்பதையும் வருடம் தவறாமல் நாயகன் செய்யும் முயற்சியை விளக்கமாக எழுதியுள்ளேன் நன்றி
முன்னுரை
தனக்கென அன்பு செலுத்த யாரும் இல்லாத நிலையில் அன்பு காட்ட ஒருவர் இருக்கிறார் என தெரிந்தும் அவரை சென்றடையும் பாதை கரடுமுரடாக இருந்தாலும் துணிந்து சென்று பல சவால்களைக்கடந்து தனது அன்புக்குரியவரை கைபிடித்தால் உருவாகும் அன்பே காதலாகும் இதுவே இந்த கதையின் கருவாகும்.