முன்னுரை
முற்பிறவியில் முக்தியடையாமல் நிறைவேறாத ஆசைகளுடன் இறந்துப் போன பெண் ஆன்மா ஒன்று மறுபிறவியில் பிறந்த நாயகியின் மூலம் தனது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் தனது ஆன்மாவிற்கு முக்தி கிடைக்கவும் செய்யும் போராட்டங்களால் நாயகிக்கு ஏற்பட்ட சோதனைகளும் நாயகன் அடைந்த பிரச்சனைகளும் அதோடு அந்த ஆன்மாவின் நிலைமை என்னவானது மற்றும் நாயகனும் நாயகியும் இறுதியில் என்னவானார்கள் என்பதை சொல்லும் கதையாகும். இக்கதை ஒரு பேய் கதை போன்று இருந்தாலும் இது ஒரு நல்ல ஆன்மாவின் காதல் கதையாகும் முற்பிறவியில் பிரிந்த காதலர்கள் இப்பிறவியில் சேர்ந்தார்களா சேர்ந்த போது ஏற்பட்ட நிகழ்வுகளின் தொகுப்பை கதையாக வடித்துள்ளேன் நன்றி
முன்னுரை
தன் தாயின் காதல் திருமணத்தால் பிரிந்து தனித்தனியாக விலகிச் சென்ற தாய் வழி உறவுகளின் குடும்பங்களை ஒன்று சேர்க்க கதாநாயகி எடுத்த சபதத்தால் அவள் நாயகனுடன் சேர்ந்து அவளுக்கு நடக்கும் பிரச்சனைகளையும் அவற்றை எவ்வாறு கடந்து போராடி பிரிந்த குடும்பங்களை ஒன்று சேர்க்கிறாள் என்பதுமே இக்கதையின் கருவாகும்.
அன்பான வாசகர்களே….
முதலில் உங்களிடம் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் தொடர்ந்து எனது கதைகளை படித்து ஆதரவு தந்து என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் என் நன்றிகள்.
பெரும்பாலும் எனது கதைகளில் நிறைய கதாபாத்திரங்கள் இடம் பிடித்திருக்கும் கூட்டுக்குடும்பம் சொந்தம் பந்தம் என ஏகப்பட்டவர்கள் அவர்களுக்கு ஏற்ப கதையில் கூடுதல் வசனங்கள் கூடுதல் கிளை கதைகள் என கதம்பமாக கதையை எழுதியிருப்பேன் ஆனால் இப்போது நான் எழுதியுள்ள இதற்கு பெயர்தான் காதலா!!!??? கதை உண்மையில் மாறுபட்டது.
இக்கதையில் பெரும்பாலும் வரும் கதாபாத்திரங்கள் வெறும் 5 நபர்கள்தான். இக்கதையில் வரும் கதாபாத்திரங்கள் கதாநாயகன் சூர்யா அவனது தந்தை ரத்தினம் தாய் சரஸ்வதி மற்றும் கதாநாயகி ஹர்ஷவர்தினி அவளது தந்தை மகேஸ்வரன் ஆகும். இவர்கள் ஐவரை சுற்றியே கதை நகரும் முக்கியமாக நாயகன் நாயகிக்கு பெருமளவு கதையில் இடம் கொடுத்துள்ளேன் இதற்கு முன் எழுதிய கதைகளை விட இது சற்று வித்தியாசமான காதல் கதையாகும். கண்டிப்பாக இக்கதை தங்கள் அனைவரையும் கவரும் என எதிர்பார்க்கிறேன்
நன்றி
சசிரேகா
கதை முன்னுரை
அன்பிற்காக ஏங்கும் கதாநாயகி ஹர்ஷவர்தினிக்கு நாயகன் சூர்யாவிடமும் அவனது குடும்பத்தாரிடமும் கொட்டிக் கிடக்கும் அன்பை பெற அவள் போராடும் போராட்டத்தில் அவள் வெற்றி பெற்றாளா? உண்மையான காதலும் தாய்அன்பும் அவளுக்கு கிடைத்ததா? அல்லது கிடைக்காமல் போன தருணங்களில் அவளது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? அதிலிருந்து அவள் மீண்டாளா அவளது நிலைமை என்னவானது? என்பதை பற்றி சொல்வதே இக்கதையாகும்.
ஹாய் பிரண்ட்ஸ்,
அனைவருக்கும் வணக்கம்..இதுவரை என் கதைகளை படித்து எனக்கு ஆதரவு அளித்து என் எழுத்தில் இருந்த நிறை குறைகளை சுட்டிக்காட்டி என்னை வழி நடத்திய அனைத்து தோழமைகளுக்கும் நன்றி..
நீங்கள் அளித்த ஆதரவாலும் ஊக்கத்தாலும் எனது அடுத்த கதையை தொடங்க இருக்கிறேன்..கதையைப் பற்றி??
என்ன கதை என்று சொல்லாமல் கொஞ்சம் சஸ்பென்ஸில் இருக்கட்டும்.. ஆனாலும் கதையின் தலைப்பிலிருந்து நீங்களே ஓரளவுக்கு யூகித்திருப்பீர்கள்...உங்கள் யூகம் சரிதானா என்று தெரிந்து கொள்ள இந்த கதையை தொடர்ந்து படியுங்கள்..
இந்த கதையும் உங்கள் மனதுக்குப் பிடித்த இனிமையான காதல் கதைதான்..எனது இந்த கதைக்கும் உங்களுடைய ஆதரவையும் ஊக்கத்தையும் அளித்து என்னை உற்சாகப் படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.. Happy Reading!!!
********