Online Books / Novels Tagged : mysteries - Chillzee KiMo

Mathiyur Mysteries Series - Novel # 01 | A Sathya & Shakti Mystery Novel.

   

Second edition.

முன்னுரை.

மதியூர் மிஸ்டரீஸ் கதைகளின் தொடக்கப் புள்ளியான இந்தக் கதை, மதியூர் எனும் கற்பனைக் கிராமத்தில் நிகழ்வது. இந்தக் கதைகளில் "இன்ஸ்பெக்டர் தேன்" கதையில் நமக்கு அறிமுகமான மதியூர் கிராமம், இன்ஸ்பெக்டர் தென்றல்வாணன் மற்றும் அவனின் மனைவி சத்யா மீண்டும் முக்கிய பங்கு வகிக்கப் போகிறார்கள்.

அவர்களுடன் மதியூர் மிஸ்ட்ரீஸ் கதைகளின் ஒரு கதாநாயகியான சக்தியும் இந்த கதையில் நமக்கு அறிமுகம் ஆகப் போகிறாள்.

  

'இன்ஸ்பெக்டர் தேன்' படிக்காதவர்களுக்காக ஒரு க்விக் இன்ட்ரோ:

இன்ஸ்பெக்டர் தேன் என்று அழைக்கப்படும் தென்றல்வாணன் நேர்மையான போலீஸ் அதிகாரி. தன் குடும்பத்தின் நலத்திற்காக அமைதியான கிராமம் என அவன் கருதும் மதியூருக்கு மாற்றல் வாங்கி வந்தவன்.

தென்றல்வாணனின் மனைவி சத்யா அவனுக்கு வீட்டிலும், வேலையிலும் ஆதரவாக இருப்பவள். தென்றல்வாணன் சத்யாவின் ஒரே மகள் ஷாலினி!

   

மதியூர் மிஸ்ட்டரீஸ் - 01 - ஒரு கிளி உருகுது...! - Chillzee Originals 

கதையைப் பற்றி:

மதியூர் எனும் அமைதியான கிராமத்தில் நிகழ்ந்த ஒரு மரணம், கொலையா விபத்தா என்று தெளிவில்லாமல் இருக்கிறது. ஊரில் இருக்கும் பலரும் நடந்தது கொலை, அதற்கு காரணம் அஹல்யா என்று நம்புகிறார்கள். அஹல்யாவை பற்றி பலரும் பலவிதமான தவறான செய்திகளை சொல்கிறார்கள்.

ஆனால், அஹல்யா நல்லவள் என்று நம்புகிறான் அபினவ். அவளை திருமணம் செய்துக் கொள்ளவும் விரும்புகிறான்.  எதனால் அஹல்யாவை பற்றி தவறான செய்தி பரவியது என்று அவன் கண்டுப்பிடிக்க உதவுகிறாள் சத்யா. அவளுடைய புதிய தோழி சக்தியும் அவளுக்கு உதவுகிறாள். அஹல்யா உண்மையில் நல்லவள் தானா? அஹல்யா சம்மந்தப்பட்டதாக சொல்லப்படும் மரணம், கொலையா விபத்தா??

'கண்ணால் காண்பது பொய்' என்பது எப்போதும் உண்மையா?

நம் கதாநாயகிகளுடன் பயணம் செய்து நாமும் தெரிந்துக் கொள்வோம்.

இது ஒரு குடும்பம் - காதல் -  மர்மம் நிறைந்த கதை!

Published in Books

காளிங்கன் - சுபஸ்ரீ முரளி

வணக்கம்

நாக அரச பரம்பரையினர் வெளிநாட்டு சிலை திருடும் கும்பல் இந்த இரு பிரிவினரும் காளிங்கன் விக்ரகத்தை தேடுகின்றனர்.

இறுதியில் காளிங்கன் யாருக்கு வசமமாகிறான்? ஏன்? எதற்கு? என்பதே இக்கதை.

படித்து மகிழுங்கள்.

சுபஸ்ரீ முரளி

Published in Books

நீ தானா...??? - பிந்து வினோத்

Second edition.

 

சாந்தி - அரவிந்த் காதல் திருமணம் fairy tale போன்ற ஒன்றாக இருக்கிறது. இனிதாக போகும் அவர்கள் வாழ்வில் கம்பெனியில் காணாமல் போகும் பணம் புயலை கிளப்புகிறது.

இந்த பெரும் புயலை சமாளித்து, அரவிந்தும் சாந்தியும் தங்கள் இனிய வாழ்வை தொடர்ந்தார்களா என்பதை கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!

இது குடும்பம் - காதல் - மர்மம் என அனைத்தும் நிறைந்த ஒரு ஜனரஞ்சக படைப்பு! 

 

Published in Books

ரிங்கா ரிங்கா ரோசஸ் - சுபஸ்ரீ முரளி

இரண்டு சிறுமிகள் தங்கள் உயிரை குடித்த  மனித அரக்கனை ஆவியாக உருவெடுத்து பழிவாங்கும் கதை.

Published in Books

கஜா - சுபஸ்ரீ முரளி

கஜா துடிதுடிப்பான இளைஞன்.

அவன் மனதைக் கவர்ந்தவள் பொன்னி.

தன்னவளுக்காக அபாயமான முயற்சியில் இறங்குகிறான்.

அப்போது அவன் எகிப்து நாட்டு மர்மம்  மற்றும் அதன் அரசி கிளியோபட்ராவைப் பற்றி அறியும் விசித்திரமான நிகழ்வுகள்,

அவை அவனை எவ்வாறு பாதிக்கிறது என்பதே இக்கதை.

படித்து மகிழுங்கள்

சுபஸ்ரீ முரளி

Chillzee Reviews

Check out the Gaja story reviews from our readers.

  

 

Published in Books
Page 1 of 3