Online Books / Novels Tagged : செல்வராஜ் - Chillzee KiMo

நான் அவன் இல்லை! - பத்மினி செல்வராஜ்

அன்பான வாசகர் தோழமைகளே!!!

எனது புதிய கதையுடன் மீண்டும் உங்களை சந்திக்க வந்து விட்டேன்.

மத்தியதர குடும்பத்தை சேர்ந்தவள் நம் கதையின் நாயகி...எப்பொழுதும் தேனி போன்ற சுறுசுறுப்பும், துறுதுறுப்பும், கூடவே கொஞ்சமாய் அசட்டுதுணிச்சலும் மிக்கவள். காலத்தின் கணக்கால் பட்டாம்பூச்சியாய் சுற்றி திரியும் தருணத்தில் குடும்பத்தின் பொறுப்பை சுமக்க வேண்டிய சூழ்நிலை.

அதையும் இன்முகத்துடனே சுமக்க தயாராகிறாள் அந்த பட்டாம்பூச்சி. . கூடவே அவளுடைய அசட்டு தைர்யத்தில் யோசிக்காமல் அவள் செய்யும் ஒரு செயல் அவள் வாழ்க்கையையே புரட்டி போட இருக்கிறது.

அவளுக்கு பல இன்னல்களை கொண்டு வந்து சேர்க்க போகிறது. அந்த இன்னல்களை எல்லாம் சமாளித்து வெளிவருவாளா? அவள் வாழ்க்கையில் மீண்டும் பட்டாம்பூச்சியாய் வலம் வருவாளா?

தெரிந்து கொள்ள இந்த கதையை தொடர்ந்து படியுங்கள்...

இதுவும் உங்கள் மனதுக்கு பிடித்த இனிமையான, கலகலப்பான, ஜாலியான காதல் கதைதான். தொடர்ந்து படித்து மறக்காமல் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Happy Reading!!!- அன்புடன் பத்மினி செல்வராஜ்!  

Published in Books

பெண் ஒன்று கண்டேன்...! - பத்மினி செல்வராஜ்

அன்பான வாசக தோழமைகளே!!!

அனைவருக்கும் வணக்கம் !. எனது புதிய கதையுடன் மீண்டும் உங்களை சந்திக்க வந்து விட்டேன்.

முதன்முறையாக காதலை குறைத்து நட்பை பற்றி எழுதிட வந்திருக்கிறேன். அதற்காக காதல் இல்லை என்றில்லை..காதல் இல்லாமல் மானிடமே இல்லையே..!

நட்பு- உலகில் அன்னையின் அன்புக்குப்பின் உன்னதமாகப் போற்றப்படுவது நல்லதொரு நண்பன்/நண்பி  காட்டும் தூய்மையான அன்புதான்.  காதலுக்கு இணையானது... அதையும் விடவே மேலானது.

நட்பு என்றாலே பொதுவாக பெண்களின் நட்புதான் கண் முன்னே நிற்கும். ஆனால் காலங்காலமாய் ஆண்களின் நட்புதான் பெரிதாக போற்றபட்டு வந்திருக்கின்றன.

நட்பு என்றதும் கண் முன்னே வருவது தமிழ் புராணங்களில் காட்டப்பட்ட துரியோதனன்-கர்ணன் நட்பு, கண்ணன்-குசேலன் நட்பு. அதோடு நிஜ வாழ்க்கையிலும் பெரிதாக போற்றப்பட்ட கார்ல் மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் நட்பு, கோப்பெருஞ்சோழன்-பிசிராந்தையார் நட்பு... இப்படி இன்னும் எத்தனையோ பேர்களை வரிசைபடுத்தலாம்.

இன்றைய தலைமுறையிலும், அன்றாடம் பழகும் சமுதாயத்திலும்  இவர்களைப் போன்ற நெருங்கிய நண்பர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அப்படிபட்ட நட்பில்,  ஈருடல் ஓருயிராக பழகிய இருவரின் நட்பில் விரிசல் வந்தால்? அது எப்படி அவர்களை பாதிக்கும்? அந்த விரிசலில் சிக்கி கொண்ட  இரு பெண்களின் வாழ்க்கை  என்ன ஆனது?. ஒருமுறை விழுந்த விரிசல் மீண்டும் சரியாகுமா? சொல்ல வந்திருக்கிறேன் பெண் ஒன்று கண்டேன் பயணத்தின் மூலமாக.

இதுவும் உங்கள் மனதுக்கு பிடித்த இனிமையான நட்பு+ காதல் கலந்த ஜாலியான கதைதான். தொடர்ந்து படித்து மறக்காமல் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். Happy Reading!!!- அன்புடன் பத்மினி செல்வராஜ்!  

Published in Books

காதலடி நீயெனக்கு!! - பத்மினி செல்வராஜ்

அன்பான வாசகர் தோழமைகளே!!!

எனது புதிய கதையுடன் மீண்டும் உங்களை சந்திக்க வந்து விட்டேன்.

எனது முந்தைய கதைகளான உன்னை விடமாட்டேன்...என்னுயிரே, அழகான ராட்சசியே வரிசையில் அடுத்ததாய் ஒரு கலகலப்பான, ஜாலியான காதல் கலந்த கலாட்டா கதை இது.

முழுக்க முழுக்க பொழுதுபோக்கிற்காக எனது கற்பனையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன்.

இதுவும் உங்கள் மனதுக்கு பிடித்த இனிமையான காதல் கதைதான். படித்து மறக்காமல் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். Happy Reading!!!- அன்புடன் பத்மினி செல்வராஜ்!

Published in Books

புத்தகம் மூடிய மயிலிறகே...! - பத்மினி செல்வராஜ்

காதலை வெறுக்கும் நம் நாயகியையும், தன் கவிதைகள், புதினங்களுமாய் விரிந்து கிடக்கும் கற்பனை உலகில் காதலை ஆராதித்து  இனிக்க இனிக்க திகட்ட திகட்ட காதலிக்கும் நம் நாயகனையும்  சேர்த்து வைத்து மதிப்பிற்குரிய திருவாளர் விதியார் ஆடும் ஆட்டம் தான் புத்தகம் மூடிய மயிலிறகே...!

இந்த கதையும் உங்கள் மனதுக்குப் பிடித்த இனிமையான குடும்பம்+ காதல் கலந்த ஜனரஞ்சக கதைதான்..எனது இந்த கதைக்கும் உங்களுடைய ஆதரவையும் ஊக்கத்தையும் அளித்து  என்னை உற்சாகப் படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.. தொடர்ந்து படித்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.. Happy Reading!!! -அன்புடன் பத்மினி செல்வராஜ்...

Published in Books

என் உயிரானவள்... - பத்மினி செல்வராஜ்

டியர் ரீடர்ஸ்,

என்னுடைய முந்தைய கதையான இதழில் கதை எழுதும் நேரமிது கதைக்கு சிலர் எதிர்மறையான கருத்துக்களை பகிர்ந்து இருந்தாலும் என் எழுத்தை புரிந்து கொண்டு பலர் எனக்கு ஆதரவு அளித்து என்னை உற்சாகபடுத்தினர்...

அவர்களுக்கெல்லாம் மீண்டும் ஒரு முறை என் மனமார்ந்த நன்றிகள்.. நான் அந்த கதையை எழுத ஆரம்பித்த பொழுது கொஞ்சம் வேற மாதிரியாக யோசித்து வைத்திருந்தேன்..

ஆனால் நடுவில் கொஞ்சமாய் ட்ராக் மாறி வேறு பாதையில் சென்றுவிட்டது.. நிறைய பேருக்கு அந்தக் கதை அவசரமாக முடிந்துவிட்டது போல தோன்றியிருக்கும்..

எனக்கும் அதே போல் தான்.. ஒரு சேட்டிஸ்பேக்சன் இல்லை..

அதனால் நான் நினைத்தபடியான ஒரு முடிவை அந்தக் கதையை இரண்டாவது பாகமாக என் உயிரானவள் ல்  மீண்டும் தொடர்கிறேன்..

நான் முன்பே சொன்னது போல இந்த கதை ஒரு பொழுதுபோக்கிற்கான ரொமான்டிக் கதை மட்டுமே.. 

தன் இணையை எந்த மாதிரியான சூழ்நிலையிலும் எந்த விதமான மனிதரிடமும் கண்டு கொள்ளுமாம் இந்த காதல்...அதன் அடிப்படையில் காதலை மட்டுமே மையமாக வைத்து என் கற்பனையில் தோன்றியதுதான் இந்த கதை...

இந்த கதையின் இரண்டாம் பாகம் காதலை உணராத இரண்டு வேறுபட்ட மனங்களின் மோதல்களும் ஊடல்களும் பற்றியது.. இறுதியில் யார் வென்றார்கள் என்று பார்க்கலாம்..இது முழுக்க முழுக்க பொழுது போக்கிற்காக எழுதுவது...அதனால்    சீரியஸாக எடுத்துக் கொண்டு படிக்காமல் ரிலாக்சாக என்ஜாய் பண்ணி படியுங்கள்..Happy Reading!!

Published in Books
Page 1 of 4