Online Books / Novels Tagged : செல்வராஜ் - Chillzee KiMo

அழகான ராட்சசியே!!! - பத்மினி செல்வராஜ்

Summary:
நாயகன் மகிழன் IT துறையில் இருப்பவன்... நாயகியும் அதே துறையில் இருப்பவள்.. ஆனால் எதிர் எதிரான பிரிவு..நாயகன் மகிழன் டெவலப்மென்ட்(Development) லும் நம் நாயகி டெஸ்டிங் (Testing) லும் வேலை செய்பவர்கள்....

பொதுவாக எல்லா IT நிறுவனங்களிலும் டெவலப்மென்ட் டீமும் டெஸ்டிங் டீமும் இந்தியா பாகிஸ்தான் மாதிரி எப்பவும் முறைத்து கொண்டே இருப்பார்கள்...

அது மாதிரி நம் நாயகனும் நாயகியும் இப்படி பட்ட எதிர் எதிர் பிரிவில் வேலை செய்ய, அவர்களுக்குள் நடக்கும் மோதல்கள், மAzற்றும் IT அலுவலகத்தில் நடக்கும் ஜாலியான கலாட்டாக்கள் நிறைந்ததே இந்த கதையின் போக்கு...

இது ஒரு மோதல் + காதல் + கலாட்டாக்கள் கலந்த ஜாலியான கதை... முழுக்க முழுக்க என்டர்டெய்ன்மென்ட்க்காக எழுதிய கதை..இந்த கதையை தொடர்ந்து படித்து தவறாமல் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்...Happy Reading!!!

Published in Books

தவமின்றி கிடைத்த வரமே - பத்மினி செல்வராஜ்

நாயகன் வசீகரன் ஒரு புகழ் பெற்ற இதய  அறுவை சிகிச்சை நிபுணன்... ஒவ்வொருவர் இதயத்திலும் எந்த மாதிரியான குறை இருந்தாலும் அதை கண்டறிந்து குணபடுத்தி வெற்றி கண்டவன்....

அப்படிபட்ட நம்  நாயகன் ஒரு பெண்ணின் இதயத்தில் என்ன இருந்தது என்று கண்டு பிடிக்க முடிந்ததா?? கண்டு பிடித்து குணபடுத்த முடிந்ததா??  என்பதை அறிந்து கொள்ள இந்த கதையை தொடர்ந்து படியுங்கள்.....

இதுவும் ஒரு ஜாலியான காதல் கலந்த கதை...இந்த கதையும் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்.. Happy Reading!!! 

Published in Books

கண்டேன் என் காதலை... - பத்மினி செல்வராஜ்

முன்னுரை:

அனைவருக்கும் வணக்கம்..

இதுவரை என் கதைகளை படித்து ஆதரவும் உற்சாகமும்  அளித்து வரும் சில்சீ நட்பூக்களுக்கு நன்றி..

தொடர் கதையோடு நாவல் எழுதும் வகையில் அடுத்ததாக கண்டேன் என் காதலை என்ற எனது இரண்டாவது நாவலுடன் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்..

கதையை பற்றி??

காதலின் மகிமையை உணர்த்த, அந்த சிங்கார வேலன் ஆடும் திருவிளையாடலே இந்த கதை..

இரண்டு காதல் ஜோடிகளுக்கு இடையில் குழப்பத்தை கொண்டு வந்து அதை தனக்கு சாதகமாக்கி கொண்டு அந்த வேலன் ஆடும் ஆட்டம் தான் கதையின் போக்கு.. இந்த ஆட்டமும் சுவாரஸ்யமாக இருக்கும் என நம்புகிறேன்...

படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்...Happy Reading !!!    

Published in Books

காதோடுதான் நான் பாடுவேன்...

முன்னுரை:

Hi Friends,

அனைவருக்கும் வணக்கம்....

எழுத்துலகில் எனது முதல் தொடர்கதையான “என் மடியில் பூத்த மலரே” க்கு ஆதரவு அளித்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!!

நீங்கள்  அளித்த ஆதரவு+ஊக்கத்தால் எனது அடுத்த கதையான “காதோடுதான் நான் பாடுவேன்...” உடன் உங்களை மீண்டும் சந்திக்க நானும் மை பெஸ்ட் பிரெண்ட் வேல்ஸ் ம்  வந்திருக்கிறோம்...

கதையை பற்றி ?

தன் பக்தையின் குறையை தீர்க்க  நம்ம வேல்ஸ் ஒரு திட்டம் போட்டு கட்டம் போட்டு விளையாடப் போகிறான். அவனை எதிர்த்து ஒரு போட்டியாளரும் களம் இறங்க, அந்த போட்டியாளரை வென்று அந்த சிங்காரவேலன் தன் ஆட்டத்தில் வெற்றி பெறுவானா? அந்த வேலனையே எதிர்த்து நிற்கும் அந்த போட்டியாளர் யார்? என தெரிந்து கொள்ள இந்த கதையை படியுங்கள்..

இதுவும் உங்கள் மனதுக்கு பிடித்த இனிமையான காதல் கதை.. Happy Reading!!     

Published in Books



பூங்கதவே தாள் திறவாய்... - பத்மினி செல்வராஜ்

முன்னுரை:

Hi Friends,

இதுவரை தொடர்கதை எழுதிய நான் முதல் முறையாக ஒரு நாவலை எழுதலாம் என்று முயற்சி செய்திருக்கிறேன்... தொடர்கதை எழுதுவதற்கும் ஒரு நாவலை ஒரே நேரத்தில் எழுதுவதற்கும் பெரிய வித்தியாசங்கள்...

ஆனாலும் முடிந்த அளவுக்கு சுவாரஸ்யமாக கொண்டு செல்ல முயன்றிருக்கிறேன்...

கதையை பற்றி??

என்ன கதை என்று தெரியாமல் படிப்பதும் ஒரு சுவாரஸ்யமே..!!! அதனால் என்ன கதை இது என்று கதையை படித்து பாருங்கள்...இதுவும் ஒரு இனிய காதல் கதைதான்...

உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்..படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்...Happy Reading !!!

Published in Books
Page 3 of 4