Online Books / Novels Tagged : பத்மினி - Chillzee KiMo



பூங்கதவே தாள் திறவாய்... - பத்மினி செல்வராஜ்

முன்னுரை:

Hi Friends,

இதுவரை தொடர்கதை எழுதிய நான் முதல் முறையாக ஒரு நாவலை எழுதலாம் என்று முயற்சி செய்திருக்கிறேன்... தொடர்கதை எழுதுவதற்கும் ஒரு நாவலை ஒரே நேரத்தில் எழுதுவதற்கும் பெரிய வித்தியாசங்கள்...

ஆனாலும் முடிந்த அளவுக்கு சுவாரஸ்யமாக கொண்டு செல்ல முயன்றிருக்கிறேன்...

கதையை பற்றி??

என்ன கதை என்று தெரியாமல் படிப்பதும் ஒரு சுவாரஸ்யமே..!!! அதனால் என்ன கதை இது என்று கதையை படித்து பாருங்கள்...இதுவும் ஒரு இனிய காதல் கதைதான்...

உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்..படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்...Happy Reading !!!

Published in Books

எங்கே எனது கதை?? - பத்மினி  செல்வராஜ்

Hi Friends,

என் கதைகளை படித்து ஆதரவும் உற்சாகமும் அளித்து வரும் உங்களுக்கு நன்றி...

நம் வாழ்வின் எந்த ஒரு நிலையையும் படிப்படியாகத்தான் கடக்க முடியும்... உதாரணமாக, பள்ளி பருவத்தில் LKG ல் ஆரம்பித்து படிப்படியாக முன்னேறி பின் கல்லூரி அதன் பின் வேலை என்று முன்னேறுவதைப் போல, ஒரு எழுத்தாளரும் முதலில் ஆரம்பிப்பது சிறுகதை  எழுதுவதில்...

அதே போல நானும் இந்த எழுத்துலகில் அடி எடுத்து வைக்கும் பொழுது சிறுகதை எழுத்தாளராக உள்ளே நுழைந்தேன்... அப்படி எழுதிய சிறுகதைகளில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி...!!! 

இந்த கதைகளையும் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்...

Hope you like my short stories as well.. Happy Reading!!!

- அன்புடன் பத்மினி

 

Published in Books

என் மடியில் பூத்த மலரே - பத்மினி செல்வராஜ்

நாயகன் ஆதித்யா, முன்னேறி வரும் சிறந்த தொழிலதிபன். அவனுடைய திருமண வாழ்க்கை தோழ்வியில் முடிந்ததால், பெண்கள் மீது வெறுப்பாக இருப்பவன். எவ்வளவு தான் அவன் அம்மா வற்புறுத்தியும் மற்றொரு திருமணத்தை மறுத்து வருபவன். நாயகி பாரதி, கிராமத்து பெண். குடும்ப சூழ்நிலை காரணமாக குடும்பத்தின் பொறுப்பை ஏற்க வேண்டியதாகிரது. அதற்காக, ஆதித்யாவின் அம்மா திட்டப்படி , அவன் குழந்தைக்கு வாடகை தாயாகிறாள்.. ஆரம்பத்தில் ஆதித்யா பாரதியை வெறுத்தாலும், அவனுடைய குழந்தையின் வளர்ச்சியை பாரதியின் வயிற்றில் காணும் பொழுது, அவன் மனம் தானாக பாரதியின் பக்கம் சாய்கிறது. பாரதி அவன் காதலை ஏற்றுக் கொண்டாளா?? என்று தெரிந்து கொள்ள இந்த கதையை தொடர்ந்து படியுங்கள்...

 

Published in Books

உன்னை விட மாட்டேன்... என்னுயிரே... - பத்மினி செல்வராஜ்

உன்னை விட மாட்டேன்... என்னுயிரே ஒரு மோதல்+காதல் கதை. கதாநாயகன் நாயகிக்கு என்ன மோதல் வந்தது. அது எப்படி காதலாக மாறியது என்பதை கொஞ்சம் சுவராசியமாக எழுத முயற்சி செய்திருக்கேன்.. முழுக்க முழுக்க என்டர்டெய்ன்மென்ட்க்காக + ஷ்ட்ரெஷ் ரிலீப்க்காக எழுதிய கதை இது...I hope you enjoy this story. Happy Reading!!!

 

Published in Books
Page 4 of 4