Padmini Selvaraj

Padmini Selvaraj

நிலவே என்னிடம் நெருங்காதே!! - பத்மினி செல்வராஜ்

ஹாய் பிரண்ட்ஸ்,
அனைவருக்கும் வணக்கம்..இதுவரை என் கதைகளை படித்து எனக்கு ஆதரவு அளித்து என் எழுத்தில் இருந்த நிறை குறைகளை சுட்டிக்காட்டி என்னை வழி நடத்திய அனைத்து தோழமைகளுக்கும் நன்றி..
நீங்கள் அளித்த ஆதரவாலும் ஊக்கத்தாலும் எனது அடுத்த கதையை தொடங்க இருக்கிறேன்..

கதையைப் பற்றி??

என்ன கதை என்று சொல்லாமல் கொஞ்சம் சஸ்பென்ஸில் இருக்கட்டும்.. ஆனாலும் கதையின் தலைப்பிலிருந்து நீங்களே  ஓரளவுக்கு யூகித்திருப்பீர்கள்...உங்கள் யூகம் சரிதானா  என்று தெரிந்து கொள்ள இந்த கதையை தொடர்ந்து படியுங்கள்..
இந்த கதையும் உங்கள் மனதுக்குப் பிடித்த இனிமையான காதல் கதைதான்..எனது இந்த கதைக்கும் உங்களுடைய ஆதரவையும் ஊக்கத்தையும் அளித்து  என்னை உற்சாகப் படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.. Happy Reading!!!

********

தேடும் கண் பார்வை தவிக்க... - பத்மினி செல்வராஜ்

ஹாய் பிரண்ட்ஸ்,

அனைவருக்கும் வணக்கம்.. Chillzee ன் வாசகியாக இருந்த நான் ஆர்வக் கோளாறில் பொழுது போக்கிற்காக விளையாட்டாக எழுத ஆரம்பித்து இன்றோடு மூன்று வருடம் முடிந்து விட்டது..

எழுத ஆரம்பித்த இந்த மூன்று வருடங்களில் எனக்குள்ளே நிறைய மாற்றங்கள்.. வாழ்க்கையை இன்னும் நன்றாக புரிந்து கொள்ள என் எழுத்தும் உதவியிருக்கிறது என்று எண்ணும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது..

அறிமுக எழுத்தாளராக Chillzee உள்ளே நுழைந்த எனக்கு என் எழுத்தில் இருந்த நிறை குறைகளை சுட்டிக்காட்டி என்னை வழி நடத்திய அனைத்து தோழமைகளுக்கும் நன்றி..

நீங்கள் அளித்த ஆதரவாலும் ஊக்கத்தாலும்  Chillzee ல் வெளியான எனது ஆறு கதைகளும் KiMo ல் நேரடியாக வெளிவந்த எனது மூன்று நாவல்களும் சேர்த்து பார்த்தால் நான் இப்பொழுது எழுதுவது எனது பத்தாவது கதை..

When I realize that, I said myself WOW.. ?..

என்னாலும் பத்து கதைகளை எழுத முடிந்தது என்று எண்ணும்பொழுது எனக்கே  ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.. இதற்கெல்லாம் காரணமான உங்களுக்கு மீண்டும் நன்றியை சொல்லிக் கொள்கிறேன்..

கதையைப் பற்றி??

கதையின் தலைப்பிலிருந்து ஓரளவுக்கு யூகித்திருப்பீர்கள்..ஆம்... நம் பயணத்தின்  நாயகன் எதையோ தொலைத்து விட்டு தேட போகிறான்..அவன் தேடுவது அவனுக்கு கிடைக்குமா?  என்று அறிந்து கொள்ள இந்த கதையை தொடர்ந்து படியுங்கள்..

எனது பத்தாவது கதைக்கும் உங்களுடைய ஆதரவையும் ஊக்கத்தையும் அளித்து  என்னை உற்சாகப் படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.. இந்த கதையும் உங்கள் மனதுக்குப் பிடித்த இனிமையான காதல் கதைதான்..படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.. Happy Reading!!!

********

Kids Fun Stories - Deepak Charan

Hi Friends,

I would like to share my son Deepak Charan’s few stories here. These stories are for the  kids who enjoy reading. He wrote these stories when he was in 5th grade.

When I read his stories and motivated him to write more, I internally motivated myself to start writing stories. That’s how my journey started in writing..

He is one of the inspirer who encouraged me to write.

I’m glad to share his stories with you. Please share these to your kids and motivate them to write if they are interested. Happy Reading!!! 

-Padmini Selvaraj

தாழம்பூவே வாசம் வீசு!!! - பத்மினி செல்வராஜ்

நாயகன் பார்த்திபன்.  கிராமத்தை சேர்ந்தவன்..வாழ்வில் எந்த பிடிப்பும் பொறுப்பும்  இல்லாமல் கடனே என்று வாழ்ந்து வருபவன்..அவன் வாழ்வில் நுழைகிறாள் ஒரு தேவதை..

அந்த தேவதை,  பாலைவனமாக இருக்கும் அவன் வாழ்வை வசந்தமாக்க போகிறாளா? இல்லை இன்னும் மோசமான நிலைக்கு இழுத்து செல்ல போகிறாளா என்று  பார்க்கலாம்...   

இதுவும் ஒரு மனதுக்கு இனிமையான காதல் கதைதான்.. இந்த கதையையும் படித்து தவறாமல்  உங்கள் கருத்துக்களை பகிருங்கள்...Happy Reading!!! 


TEN CONTEST 2019 - 20 - Entry # 03

Story Name - Ragasiya snegithane

Author Name - Padmini Selvaraj

Debut writer - No


ரகசிய சிநேகிதனே!!! - பத்மினி செல்வராஜ்

முன்னுரை

கிராமத்தைச் சேர்ந்த வெகுளியான பேதைப் பெண் நம் கதையின் நாயகி.. தன் கல்லூரி படிப்பை முடித்து வாழ்வின் அடுத்த நிலையான திருமணத்திற்கு காத்து நிற்கும் பருவ மங்கையவள்..

எல்லா பெண்களையும் போல தன்  திருமண வாழ்க்கையை பற்றி பலவிதமான கனவுகளும் கற்பனைகளும் சுமந்து நிற்பவள்..அவள் ஊர் எல்லையை கூட  தாண்டியிராதவள் சந்தர்ப்ப சூழ்நிலையால், திருமணம் முடித்து நகரத்துக்கு தன் கணவனுடன் குடியேறுகிறாள்..

கூடவே இன்றைய நவீன பொழுதுபோக்கு ஊடகங்களுக்கும் பழக்கமாகிறாள்.. அதனால் அவள் வாழ்க்கை படகு பெரும் சுழலில் சிக்கி  தடம் மாறுகிறது..

அவள் கனவு கண்டு கொண்டிருந்த அவளுடைய கற்பனை,  கனவு வாழ்க்கை நிறைவேறியதா??  தடுமாறிய அந்த பேதைப் பெண்ணின் வாழ்வு மீண்டும் நேரானதா?  இல்லை அந்த சுழலில் சிக்கி அழிந்து போனாளா? என்று  தெரிந்து கொள்ள இந்த கதையை தொடர்ந்து படியுங்கள்..

என்னுடைய இந்த கதையும் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்..நன்றி !!! Happy Reading!!!

Page 3 of 5