Chillzee KiMo Books - மதியூர் மிஸ்ட்டரீஸ் - 01 - ஒரு கிளி உருகுது...! - Chillzee Originals - Mathiyoor mysteries - 01 - Oru kili uruguthu...! - Chillzee Originals

மதியூர் மிஸ்ட்டரீஸ் - 01 - ஒரு கிளி உருகுது...! - Chillzee Originals - Mathiyoor mysteries - 01 - Oru kili uruguthu...! - Chillzee Originals
 

Mathiyur Mysteries Series - Novel # 01 | A Sathya & Shakti Mystery Novel.

முன்னுரை.

மதியூர் மிஸ்டரீஸ் கதைகளின் தொடக்கப் புள்ளியான இந்தக் கதை, மதியூர் எனும் கற்பனைக் கிராமத்தில் நிகழ்வது. இந்தக் கதைகளில் "இன்ஸ்பெக்டர் தேன்" கதையில் நமக்கு அறிமுகமான மதியூர் கிராமம், இன்ஸ்பெக்டர் தென்றல்வாணன் மற்றும் அவனின் மனைவி சத்யா மீண்டும் முக்கிய பங்கு வகிக்கப் போகிறார்கள்.

அவர்களுடன் மதியூர் மிஸ்ட்ரீஸ் கதைகளின் ஒரு கதாநாயகியான சக்தியும் இந்த கதையில் நமக்கு அறிமுகம் ஆகப் போகிறாள்.

 

'இன்ஸ்பெக்டர் தேன்' படிக்காதவர்களுக்காக ஒரு க்விக் இன்ட்ரோ:

இன்ஸ்பெக்டர் தேன் என்று அழைக்கப்படும் தென்றல்வாணன் நேர்மையான போலீஸ் அதிகாரி. தன் குடும்பத்தின் நலத்திற்காக அமைதியான கிராமம் என அவன் கருதும் மதியூருக்கு மாற்றல் வாங்கி வந்தவன்.

தென்றல்வாணனின் மனைவி சத்யா அவனுக்கு வீட்டிலும், வேலையிலும் ஆதரவாக இருப்பவள். தென்றல்வாணன் சத்யாவின் ஒரே மகள் ஷாலினி!

 

மதியூர் மிஸ்ட்டரீஸ் - 01 - ஒரு கிளி உருகுது...! - Chillzee Originals

கதையைப் பற்றி:

மதியூர் எனும் அமைதியான கிராமத்தில் நிகழ்ந்த ஒரு மரணம், கொலையா விபத்தா என்று தெளிவில்லாமல் இருக்கிறது. ஊரில் இருக்கும் பலரும் நடந்தது கொலை, அதற்கு காரணம் அஹல்யா என்று நம்புகிறார்கள். அஹல்யாவை பற்றி பலரும் பலவிதமான தவறான செய்திகளை சொல்கிறார்கள்.

ஆனால், அஹல்யா நல்லவள் என்று நம்புகிறான் அபினவ். அவளை திருமணம் செய்துக் கொள்ளவும் விரும்புகிறான். எதனால் அஹல்யாவை பற்றி தவறான செய்தி பரவியது என்று அவன் கண்டுப்பிடிக்க உதவுகிறாள் சத்யா. அவளுடைய புதிய தோழி சக்தியும் அவளுக்கு உதவுகிறாள். அஹல்யா உண்மையில் நல்லவள் தானா? அஹல்யா சம்மந்தப்பட்டதாக சொல்லப்படும் மரணம், கொலையா விபத்தா??

'கண்ணால் காண்பது பொய்' என்பது எப்போதும் உண்மையா?

நம் கதாநாயகிகளுடன் பயணம் செய்து நாமும் தெரிந்துக் கொள்வோம்.

இது ஒரு குடும்பம் - காதல் - மர்மம் நிறைந்த கதை!

 

 

  

அத்தியாயம் 1.

  

Flash News:

  

துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் சக்தி ராஜினாமா!!!

  

டி வியில் பெரிய எழுத்துக்களில் மின்னிய செய்தியைப் படித்து அதிர்ந்துப் போன தென்றல்வாணன், டிவி சத்தத்தை அதிகமாக்கினான்.

  

“... சற்று முன் கிடைத்த செய்தி.

  

சென்னை மாநகரத்தின் சிறப்பு துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் பதவியில் இருந்த பெண் ஐ.பி.எஸ் ஆஃபிசர் சக்தி தன் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

  

ஸ்டார் போலீஸ் என்று பொதுமக்களால் அன்புடன் அழைக்கப்படும் சக்தி 2010ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற்று காவல் துறையில் இணைந்தார்.

  

பல பிரசித்தி பெற்ற ரவுடிகளை சிறைக்கு அனுப்பிய பெருமை பெற்ற சக்தியின் மீது சமீப காலமாக பல விதமான துறை சம்மந்தப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வந்தது.

  

சில மாதங்களுக்கு முன் அரசியல் தலைவர் ஒருவரின் கைதுக்கு சக்தி காரணமாக இருந்ததால் இந்த பழி வாங்கும் நடவடிக்கைகள் எடுக்கப் படுவதாக வதந்திகள் இருந்த நிலையில் சக்தியின் இந்த திடீர் முடிவு பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.”

  

ரொம்ப சத்தமாக ஒலித்த செய்தி சமைத்துக் கொண்டிருந்த சத்யாவிற்கு எரிச்சலைக் கொடுத்தது.

  

“எதுக்கு இப்படி டி வியை அலற விட்ருக்கீங்க??? வால்யூமை கம்மி பண்ணுங்க” என்று கத்தியபடி டிவி இருந்த அறைக்கு வந்தவள் கணவன் தென்றல்வாணனின் முகத்தைப் பார்த்து அமைதியானாள்.

  

“யாருக்கு என்னாச்சு?” கேள்வி கேட்டபடி கணவன் பார்த்துக் கொண்டிருந்த செய்தியைப் பார்த்தாள்.

  

சென்னை காவல் துறை கட்டிடத்தில் இருந்து வெளியே வந்த சக்தியை அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்துக் கொண்டார்கள்.

  

அவர்களை விலக்கி விட்டு, யாருக்கும் பதில் சொல்லாமல் காரில் ஏறி கிளப்பிச் சென்றாள் சக்தி.

  

“யாருங்க இவங்க? உங்களுக்கு தெரிஞ்சவங்களா?”

  

“தெரியும். ஒன்னா வொர்க் செய்திருக்கோம்.”

  

தென்றல்வாணன் குரல் என்னவோ போல இருந்தது.

  

“ஏன் என்னவோ மாதிரி இருக்கீங்க?”

  

“வேற எப்படி இருக்க சத்யா? சக்தி மாதிரி ஒரு ஹானஸ்ட் ஆஃபிசரை பார்க்கவே முடியாது. ஹன்ட்ரட் பர்சன்ட் சின்சியர் ஆபிசர். அவங்களை டீமோட் செய்து, அசிங்கப் படுத்தி, வெறுத்துப் போய் ரிசைன் செய்ய வச்சுட்டாங்க. இது போலீஸ் டிபார்ட்மென்ட்க்கு மட்டுமில்லை, எல்லா மக்களுக்குமே பெரிய இழப்பு.”

  

“சரி, அதுக்கு நாம என்ன செய்ய முடியும்?”

  

“ஒன்னும் செய்ய முடியாது. கடைசியா சக்தியை டீமோட் செய்து மதியூருக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்திருந்தாங்க.”

  

“நம்ம ஊருக்கா?”

  

“ஆமா! அவங்களுக்கு ஆர்டர் கொடுக்குறதுக்கு முன்னாடியே எங்களுக்கு அன்அஃபிஷியல் மெமோல அவங்க இங்க ஜாயின் செய்தப்புறம் யாரும் அவங்களுக்கு சப்போர்ட் செய்யக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க.”

  

“நீங்க ஒன்னும் செய்யலையா???”