Chillzee KiMo Books - மலரே ஒரு வார்த்தைப் பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - பிந்து வினோத் : Malare oru vaarthai pesu... Ippadikku Poongatru..! - Bindu Vinod

மலரே ஒரு வார்த்தைப் பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - பிந்து வினோத்

மலருக்கும் பூங்காற்றுக்கும் நடுவே காதல் வரும்... ஊடல் வருமா???

ம்மாவிடம் அனுமதி வாங்காமல் திடீரென சுவாதியை திருமணம் செய்து வருகிறான் விஷாகன்.

திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் ஆன நிலையில் சுவாதி கணவனை பிரிந்து சிதம்பரம் - பத்மாவதி தம்பதிகள் வீட்டில் தங்கி இருக்கிறாள். சிதம்பரத்தின் அம்மா ருக்மணி தவிர அந்த குடும்பத்தில் அனைவருமே அவளை அவர்களில் ஒருத்தியாகவே நடத்துகிறார்கள். விஷாகன் தன்னை தேடி வருவான் என ஒவ்வொரு நாளும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறாள் அவள்...

விஷாகனிடம் சுவாதி தானாகவே வீட்டை விட்டு சென்று விட்டதாக சொல்லி விட்டு, உண்மையில் நடந்ததை சொல்லாமல் மறைக்கிறார்கள் அவனின் அம்மா விஜயாவும், தங்கை விஷ்ணுப்ரியாவும்.

மனைவி பிரிந்து சென்றதற்கு காரணம் புரியா விட்டாலும், மனதில் வலியுடன் அவளை தேடிக் கொண்டிருக்கிறான் விஷாகன்...!

பிரிந்தவர்கள் இணைவார்களா???

அவர்களின் பிரிவுக்கான காரணம் விஷாகனுக்கு தெரிய வருமா???

தெரிந்துக் கொள்ள கதையை படியுங்கள்!