Chillzee KiMo Books - உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன்... - பிந்து வினோத் : Un aasai mugam thedi yengugiren... - Bindu Vinod

உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன்... - பிந்து வினோத் : Un aasai mugam thedi yengugiren... - Bindu Vinod
 

உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன்... - பிந்து வினோத்

Third edition!!!!!

கதையைப் பற்றி:

மிகவும் துடிதுடிப்பான இளைஞனனான சுபாஷ் கல்லூரி முடித்தது முதல் தன கிராமமே உலகம் என்று தன்னை சுருக்கி கொண்டு வாழ்கிறான். அவனுக்கு திருமணம் என்ற பேச்சு தொடங்கும் போது வேண்டவே வேண்டாமென்று மறுக்கிறான்.

சுபாஷின் தம்பி மகேஷ் காதலித்து ப்ரியாவை திருமணம் செய்துக் கொள்கிறான். சுபாஷினால் மகேஷும், அவனுடைய அம்மாவும் வருத்தப் படுவதைப் பார்த்து சுபாஷ் எதனால் இப்படி இருக்கிறான் என்று கண்டுப்பிடிக்க முயல்கிறாள் ப்ரியா.

சுபாஷிற்கு திருமணம் செய்து வைத்தே தீருவேன் என்றும் பிடிவாதம் செய்கிறாள்.

ப்ரியாவின் பிடிவாதம் வென்றதா? சுபாஷின் கல்லூரி வாழ்வில் இருக்கும் ரகசியம் என்ன? அதை மகேஷும், ப்ரியாவும் கண்டுப்பிடித்தார்களா??

தெரிந்துக் கொள்ள இந்த காதல் கதையை படியுங்கள்!!

 

Prologue,

  

"நான் தப்பு செய்திட்டேன் பாப்பா. உன் வாழ்க்கையை நாசமாக்கிட்டேன். உன் அண்ணன் இள ரத்தம் கோபப்பட்டான். நானாவது அவன் பேச்சுக்கு தலை ஆட்டாமல் யோசித்து நடந்திருக்கனும். ராஜாத்தி மாதிரி இருக்க வேண்டிய உன்னை இப்படி கஷ்டப் பட வச்சுட்டேன்...",

  

அப்பா சொல்வதன் அர்த்தம் புரியாமல் விழித்தாள் லாவண்யா.

  

எதைப் பற்றி சொல்கிறார்?? அவள் படிப்பைப் பற்றியா???,

  

“பாப்பா, அப்பா தூங்கட்டும்... நீயும் போய் படு...” என்று அன்புடன் சொன்னாள் லாவண்யாவின் அம்மா.

  

மறுக்க முடியாமல் அதே அறையின் ஓரத்தில் இருந்த கட்டிலில் படுத்தாள் லாவண்யா...

  

தூக்கம் தான் வரவில்லை...

  

எப்போதும் போல கண்ணை மூடினால் அவனின் முகம் தான் கண் முன் வந்து நின்றது...!

  

மனசாட்சியே இல்லாமல் பொய் சொல்லி ஏமாற்றியவனை நினைத்து நினைத்து உருகுகிறாளே... லாவண்யாவிற்கு அவள் மீதே கோபமாக வந்தது...!!!!

  

ஆனாலும் அவனின் உருவம் கண்ணை விட்டுப் போக மாட்டேன் என்று அடம் பிடித்து நின்றது...

  

திடீரென,

  

“என்னங்க, என்ன பண்ணுது???” என்று அலறிய அம்மாவின் அலறலில் திடுக்கிட்டு எழுந்தாள் லாவண்யா.

  

“பாப்பா, அப்பாவைப் பாரு... எனக்கு பயமா இருக்கு... அண்ணன் டாக்டரை கூப்பிட போயிருக்கான்...”,

  

லாவண்யா அப்பாவின் அருகே சென்ற போது, அவளை கவனித்த அவரின் கண்கள் கலங்கியது...

  

எதுவோ சொல்ல விரும்புவது போல் அவரின் உதடுகள் துடித்தன... ஆனால் அவரால் பேச இயலவில்லை....

  

என்ன என்று புரியாவிட்டாலும், கலங்கி இருந்த அவரின் கண்களை துடைத்தவள், அவரருகிலேயே இருந்தாள்...

  

இரண்டே நிமிடம்...

  

அவளைப் பார்த்தப் படியே அப்பாவின் கண்கள் மெல்ல மூடியது...!

  

அப்பா என்ன சொல்ல வந்தார்??? அவள் படிப்பை பற்றி தான் வருத்தப் பட்டாரா??? பதில் தெரியாமல் குழப்பத்துடனே நின்றாள் லாவண்யா...

  

அத்தியாயம் 1,

  

குமாரமங்கலம், பார்க்கும் திசையெங்கும் பச்சை பசலேன பசுமையாக கண்ணை கவர்ந்தது! மலைத் தொடரின் அருகில் அமைந்திருந்த அந்த அழகான ஊரில், கம்பீரமாக நின்றிருந்த பெரிய வீட்டின் முன் வேகமாக வந்து நின்றது அந்த பென்ஸ் கார். அதற்காகவே காத்திருந்தது போல் ராஜேஸ்வரி அவசரமாக வெளியே வந்தாள். காதோரம் மின்னிய வெள்ளி