நூலைப் பற்றி ...
காற்றில் வரைந்த ஓவியம் என்ற இந்த நாவல் திருமணம் என்ற பெயரில் ஏமாற்றும் ஆண்களையும் பெண்களையும் பற்றியது.
கிராமத்தில் வெளி உலகம் அறியாமல் வாழும் இரு ஜீவன்கள் எப்படி ஒரு கயவனால் ஏமாற்றப்பட்டார்கள் என்பதை விரிவாகப் பேசுகிறது.
நம்பிக்கை தான் வாழ்க்கை. ஆனால் அந்த நம்பிக்கை தன் மீது, தன் திறமைகள் மீதான தன்னம்பிக்கையாக இருக்க வேண்டுமே அன்றி வேறோருவனை முற்றிலுமாக நம்பி விடக் கூடாது எனச் சொல்கிறது காற்றில் வரைந்த ஓவியம் நாவல்.
கோமதி ஏமாற்றப்பட்டாள். அவளது கணவன் கூற்றுப்படி அவளை கெடுத்து பிள்ளையும் கொடுத்து நட்டாற்றில் விடவில்லை அவன். தாலி கட்டிக் குடும்பம் நடத்தினான் தான். ஆனால்? அவன் எப்படிப்பட்டவன்? எப்படிப் பட்ட துரோகங்களைச் செய்தான்? அவனால் கோமதியின் எதிர்காலமே கேள்விக்குறியாக ஆனதே? ஆனாலும் கோமதியும் அவள் தாய் கல்யாணியும் மனம் தளரவில்லை. கடவுள் மீதும், தங்கள் மீதும் நம்பிக்கை வைத்தார்கள்.
கோமதியின் வாழ்வு என்ன ஆனது? அவளது எதிர்காலம் வளமாக ஆனதா? கோமதியின் கணவன் ராகவன் என்ன ஆனான்?
இந்தக் கேள்விகளுக்கு விடை தான் இந்த நாவல்.
படியுங்கள் வாசகர்களே!
படித்து விட்டுக் கருத்தை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.