Online Books / Novels Tagged : Tamil - Chillzee KiMo

 இளகி இணையும் இரு இதயங்கள் - சசிரேகா - சசிரேகா

முன்னரை

இருமாறுப்பட்ட எண்ணங்கள் கொண்ட நாயகனும் நாயகியும் தங்களது விருப்பங்களை விட்டுக் கொடுக்காமல் காதலித்து அந்தக் காதலை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் இழக்கவும் முடியாமல் போராடி பல பிரச்சனைக்களுக்குப் பிறகு அவர்கள் காதல் சேர்ந்ததா இல்லையா என்பதே இக்கதையாகும்.

 

Published in Books

வானவில்லே! வண்ண மலரே!! - ஸ்ரீஜா வெங்கடேஷ்

பதின் பருவத்தில் செய்த ஒரு தவறு எப்படி வாழ்க்கை முழுமைக்கும் பாதிக்கும் என்பதைக் கூறுகிறது "வானவில்லே! வண்ண மலரே" என்னும் இந்த நாவல்.

நிச்சயம் இதைப் படிக்கும் பதின் பருவ குழந்தைகள் கட்டாயம் இரு முறை எந்த முடிவும் எடுப்பதற்கு முன் யோசிப்பர்கள். தாய் மகள் உறவு, அண்ணன் தங்கை உறவு என பல உறவுகளைப் பற்றிப் பேசும் இந்த நாவல் கீதா என்ற பெண்ணின் துயரக் கதையை ஆண் மகன் ஒருவன் மனது வைத்தால் எப்படி மாற்ற முடியும் என்பதைக் காட்டுகிறது.

வாழ்க்கையில் காதலும் திருமணமும் எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் நட்பு. கீதாவின் இனிய தோழி மாலதி போல நமக்கும் கிடைக்கமாட்டார்களா? என ஏங்க வைக்கும் நட்பைப் பற்றிச் சொல்கிறது "வானவில்லே! வண்ண மலரே!" . தியாகமே வாழ்க்கையாக வாழும் சில தாய்மார்களின் கதையைக் கூறுகிறது. மொத்தத்தில் நமது சமூகத்தில் ஆங்காங்கே ஊடாடும் சில பெண்களையும் ஒரு சில ஆண்களையும் அவர்களது உணர்வுகளையும் வைத்து பின்னப்பட்ட கதை. படித்து விட்டுக் கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்களேன் நண்பர்களே!

Published in Books

டிங் டாங் கோயில் மணி - சசிரேகா

சில்ஸியில் நான் எழுதிய சிறுகதைகளை இங்கே உங்களுடன் பகிர்கிறேன்.

 

Published in Books

எப்போதும் அன்புக்கு அழிவில்லை - சசிரேகா

சில்ஸியில் நான் எழுதிய சிறுகதைகளை இங்கே உங்களுடன் பகிர்கிறேன்.

 

Published in Books

காணும் இடமெல்லாம் நீயே - சசிரேகா

முன்னுரை

அநியாயமும் தவறும் நடக்கும் போது அதை சகிக்க முடியாமல் கோபத்தில் பொங்கி எழுந்து அநியாயத்தை சரிசெய்யும் கதாநாயகியால் அவளது குடும்பத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் தர்மம் நியாயம் மற்றும் தனது குணமான கோபத்தையும் யாருக்காகவும் மாற்றிக்கொள்ளாமல் வாழ்கிறாள் நாயகி.

அந்த சமயத்தில் எதிர்பாராத தருணத்தில் அவள் இருக்குமிடம் தேடிவரும் இரு வேறுபட்ட குணங்கள் கொண்ட இரு கதாநாயகர்களுடன் ஏற்படும் இனிப்பும் கசப்புமான நாட்களின் இறுதியில் தனக்கான வாழ்க்கைத் துணையாக இருவரில் எவரை அவள் தேர்ந்தெடுப்பாள் என்பதே இக்கதையாகும்.

 

Published in Books