எஸ்.கே - நம் கதையின் கதாநாயகன்!
35 வயதை தாண்டியப் பிறகும் திருமணம் வேண்டாம் என்று இருக்கும் பேச்சலர். அண்ணா, அண்ணி, அவர்களின் குழந்தைகள் தான் அவனின் உலகம்.
அப்படி திருமணமே வேண்டாம் என்றிருக்கும் எஸ்.கே, 'பாஸ்' போல கறாராக தொட்டும் தொடாமல் பேசும் நந்தினியை பார்த்த உடனேயே காதல் வசப் படுகிறான்!
முதலில் மற்றவர்களைப் போல அவனையும் தள்ளியே வைக்கும் நந்தினி, மெல்ல மெல்ல அவனின் காதலை அங்கீகரிக்கிறாள்.
ஊடல், சண்டை, சச்சரவு இல்லாத காதலில் சுவாரஸ்யம் எது?
நந்தினி - எஸ்.கே காதலில் ஸ்ரேயா ஆ்தித்யா கல்யாணத்தின் வழியே கருத்து வேற்றுமையும், ஊடலும் ஏற்படுகிறது.
யாரிந்த ஆதித்யா, ஸ்ரேயா??? எதனால் அவர்களின் திருமணம் எஸ்.கே, நந்தினியை தொந்தரவு செய்கிறது?
தெரிந்துக் கொள்ள கதையை படியுங்கள்!
நம் மனம் கவர்ந்த எஸ்.கே - நந்தினி ஜோடியின் இந்த காதல் டூ கல்யாணம் பற்றி படிக்கலாம் வாங்க!!!!
முன்னுரை
யாரோ செய்த திருட்டு குற்றம் கதாநாயகன் மீது பழிவிழுந்து தண்டனையாக தன் சொந்த வீட்டிற்கே வேலைக்காரனாக மாறுகிறான். அந்த சமயத்தில் எதிர்பாராத நேரத்தில் கதாநாயகியை திருமணம் செய்து கொள்கிறான்.
திருட்டு பழியிலிருந்து தன் கணவனை மீட்க பல பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டு எப்படி கதாநாயகனை காப்பாற்றுகிறாள் கதாநாயகி என்பதும் கதாநாயகியின் குடும்பத்தில் உள்ள 7 பிரச்சனைகளை எப்படி கதாநாயகன் தீர்த்து வைக்கிறான் என்பதும் இறுதியில் பல போராட்டங்களுக்கு பிறகு என் வாழ்வே உன்னோடுதான் என இருவரும் இணைந்து ஒன்று சேர்வதே இக்கதையாகும்.
இது ஒரு காதல் கதை ஃபிரென்ட்ஸ்!
என்ன, வித்தியாசமாக திருமணத்திற்குப் பின் வரும் காதலை சொல்லும் கதை!
பலக் கதைகள் எழுதினாலும் சில கதைகள் மனதிற்கு நெருக்கமானவை! அப்படி எனக்கு பிடித்த ஒருக் கதை இந்தக் கதை. படித்து ரொம்ப நாட்கள்... ஹுஹும் வருடங்கள் ஆகி விட்டது...!!!! மீண்டும் படித்தப் போது முதல் முறை எழுதி முடித்தப் போது ஏற்பட்ட அதே ஃபீல்! அதே ஸ்மைல்!
உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன் :-)