Srija Venkatesh

Srija Venkatesh

காற்றில் வரைந்த ஓவியம் - ஸ்ரீஜா வெங்கடேஷ்

நூலைப் பற்றி ...

காற்றில் வரைந்த ஓவியம் என்ற இந்த நாவல் திருமணம் என்ற பெயரில் ஏமாற்றும் ஆண்களையும் பெண்களையும் பற்றியது.

கிராமத்தில் வெளி உலகம் அறியாமல் வாழும் இரு ஜீவன்கள் எப்படி ஒரு கயவனால் ஏமாற்றப்பட்டார்கள் என்பதை விரிவாகப் பேசுகிறது.

நம்பிக்கை தான் வாழ்க்கை. ஆனால் அந்த நம்பிக்கை தன் மீது, தன் திறமைகள் மீதான தன்னம்பிக்கையாக இருக்க வேண்டுமே அன்றி வேறோருவனை முற்றிலுமாக நம்பி விடக் கூடாது எனச் சொல்கிறது காற்றில் வரைந்த ஓவியம் நாவல்.

கோமதி ஏமாற்றப்பட்டாள். அவளது கணவன் கூற்றுப்படி அவளை கெடுத்து பிள்ளையும் கொடுத்து நட்டாற்றில் விடவில்லை அவன். தாலி கட்டிக் குடும்பம் நடத்தினான் தான். ஆனால்? அவன் எப்படிப்பட்டவன்? எப்படிப் பட்ட துரோகங்களைச் செய்தான்? அவனால் கோமதியின் எதிர்காலமே கேள்விக்குறியாக ஆனதே? ஆனாலும் கோமதியும் அவள் தாய் கல்யாணியும் மனம் தளரவில்லை. கடவுள் மீதும், தங்கள் மீதும் நம்பிக்கை வைத்தார்கள்.

கோமதியின் வாழ்வு என்ன ஆனது? அவளது எதிர்காலம் வளமாக ஆனதா? கோமதியின் கணவன் ராகவன் என்ன ஆனான்?

இந்தக் கேள்விகளுக்கு விடை தான் இந்த நாவல்.

படியுங்கள் வாசகர்களே!

படித்து விட்டுக் கருத்தை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஊரெங்கும் பூ வாசம்.... - ஸ்ரீஜா வெங்கடேஷ்

நூலைப் பற்றி ...

ஊரெங்கும் பூ வாசம் என்ற இந்த நாவல் நான் என் வாழ்க்கையில் சந்தித்த ஒரு பெண்மணியின் சொந்த அனுபவங்கள்.

இக்கதையின் நாயகியான வடிவு ஆச்சி சாதாரண காய்கறி விற்கும் பெண்மணி. வாழ்க்கையில் பல துன்பங்களையும் சோதனைகளையும் சந்தித்தவள். அவளுக்குத் துன்பங்களைக் கொடுத்தவர்கள் சொந்தக் கணவன், மகன் என்றான போதிலும் அவள் மனம் தளரவில்லை. மகள் அர்ச்சனாவை எப்படியாவது மருத்துவராக்கிப் பார்த்து விட வேண்டும் என்ற அவளது கனவிலிருந்தும் பின் வாங்கவில்லை. "என்னை விட்டுப் பிரியும் போது ஒரே ஒரு ஆண் குழந்தையுடன் தானே இருந்தது. அவன் என் மகன் தினேஷ். ஆனால் இப்போது இப்போது மகள் ஒருத்தி இருக்கிறாளே? அவளை யாருக்குப் பெற்றாய்? என்ற கணவனின் கேள்வியால் உள்ளம் புண் பட்டாலும் உண்மையான பதிலைச் சொல்லவில்லை ஆச்சி.

அர்ச்சனா உண்மையிலேயே யார்? அவளுக்கும் ஆச்சிக்கும் என்ன சம்பந்தம்? என பல கேள்விகள் வருகின்றன இந்தக் கதையில்.

மனிதாபிமானம், இரக்கம், கருணை அதே நேரத்தில் தைரியம், துணிச்சல் இவைகளின் மொத்த உருவம் தான் ஆச்சியும், அர்ச்சனாவும். குடும்பக் கதைகளைக் கூட இத்தனை விறுவிறுப்பாக சொல்ல முடியுமா? என பலரையும் வியக்க வைத்தது இந்த நாவல்.

படித்து விட்டுக் கருத்தைப் பகிருங்களேன் வாசகர்களே!

தேடி உனைச் சரணடைந்தேன்..... - ஸ்ரீஜா வெங்கடேஷ்

தேடி உன்னைச் சரணடைந்தேன் என்னும் இந்த நாவல் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள், பெண்களின் நிலை, இன்றும் பெண்களை சில குடும்பத்துப் பெரியவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? போன்றவற்றை மையமாகக் கொண்டது.

பெரிய குடும்பத்தில் பிறக்கும் கடைசி மகன்கள் ஒன்று சிறு குழந்தை என்று ஒதுக்கப்படுவார்கள் அல்லது மிக அதிக செல்லம் கொடுத்துக் கெடுக்கப்படுவார்கள். இங்கே நமது நாயகன் செந்தில் குமரன் பாவம் ஒதுக்கப்படுகிறான். அவனை தகப்பனே மதிக்கவில்லை எனில் உடன் பிறந்த அண்ணன்கள் எங்கே மதிப்பார்கள்? அவர்களது மனைவிமார்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. ஆனால் பாவம் செந்திலுக்கு தான் ஒதுக்கப்படுகிறோம் என்பதோ, தனக்குப் பெரிய மரியாதை இல்லை குடும்பத்தில் என்பதோ தெரியவில்லை அவன் வாழ்க்கையில் பெண் என ஒருத்தி வரும் வரையில். அவளும் தகப்பனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண். அதுவும் எதற்கு? பழி வாங்க. இது எதுவும் செந்திலுக்குத் தெரியாது. சந்தோஷமாக ஆரம்பிக்கும் அவன் மண வாழ்க்கையில் பல சூறாவளிகள், சதிகள். தம்பதிகள் பிரிந்து வாழும் நிலை. இறுதியில் என்ன ஆனது?

சிவகுர் எனப்படும் பண முதலை தன் கடைசி மகனின் திறமைகளை, அவன் ஆசைகளைப் புரிந்து கொண்டாரா? பெண்களும் மனிதப்பிறவிகள் தான். அவர்களுக்கும் ஆசா பாசங்கள், சாதிக்கும் ஆசை எல்லாம் இருக்கும் என உணர்ந்தாரா? அப்படியே உணர்ந்தாலும் காலம் கடந்து விட்டதோ?

படித்துத் தெரிந்து கொள்ளுங்கள் "தேடி உன்னைச் சரணடைந்தேன்"

பாண்டிய நெடுங்காவியம் - பாகம்1 - ஸ்ரீஜா வெங்கடேஷ்

நூலைப் பற்றி....

நம் தமிழ் நாட்டில் சோழ அரசர்கள் பலரின் வரலாறுகள் மிகுதியாக எழுதப்பட்டுள்ளன. ஆனால் அவர்களை விட பழமையும் பெருமையும் வாய்ந்த பாண்டியர்களைப் பற்றி அதிகமான நூல்கள் இல்லை. தகவல் இன்மை ஒரு காரணமாக இருக்கலாம். "பாண்டிய நெடுங்காவியம் - பாகம்1" என்ற பெயரோடு முதல் பாகமாக உங்கள் கரங்களில் தவழும் இந்த நாவல் சங்கப் பாடல்களில் இடம் பெற்ற ஒரு வீரத் தமிழனின் கற்பனை கலந்த உண்மை வரலாறு.

"தலையாலங்கனத்துச் செரு வென்ற பாண்டிய நெடுஞ்செழியன்" என்ற பெயர் தமிழ் படித்தவர்களுக்கு ஓரளவு நினைவிருக்கலாம். அவனது கதையை அவன் பெற்ற வெற்றியை, அவன் காதலி செண்பகக் குழலியின் தியாகத்தைப் பொற்றும் விதமாக எழுதப்பட்டது தான் பாண்டிய நெடுங்காவியம். இது மூன்று பாகங்களாக எழுதப்பட்டுள்ளது.

கண்ணகி மதுரையை எரித்த பிறகு, நீதி தவறி விட்டோம் என  மன்னன் நெடுஞ்செழியன் மனைவியோடு உயிரை விட்ட பிறகு அவர்களது செல்வன், இளவசரன் அரசனானான். அந்த நிலையில் ஏழு அரசர்கள் சேர்ந்து அவன் மீது படையெடுத்து வந்தனர். அவனோ சிறு பிள்ளை. எழுவர் சேர்ந்து வந்தால் என்ன செய்வான் பாவம்? தலை நகரின் நிலையோ பரிதாபம். வழி காட்ட தந்தை இல்லை. இந்த நிலையில் அவன் மனம் சோர்ந்தனா? நிச்சயம் இல்லை. சங்கப்புலவர்கள்  முன்னிலையில் வெஞ்சினம் கூறினான். நான் இந்த அற்பர்களை ஓட ஓட விரட்டாவிட்டால் இனி புலவர்கள் என் நாட்டைப் புகழ்ந்து பாட வேண்டாம் என சூளுரைத்தான்.

அப்படிப்பட்ட 21 வயது இளைஞனின் கதை தான் பாண்டிய நெடுங்காவியம். அவனது காதலி செண்பகக் குழலி, நண்பன் வில்லவன் கோதை என பல கதாபாத்திரங்கள் கற்பனை என்றாலும் வெற்றிவேற் செழியர், அரசர் பட்டத்தரசி போன்றவர்கள் பல காலம் முன்பாக நம்மோடு ஊடாடியவர்கள் தான்.

எந்தச் சதிக்கும் ஆரம்பம் என ஒன்று உண்டு. அதனைத் தொடங்கி வைப்பவன் குவளை மாறன். பாண்டிய நாட்டைச் சேர்ந்த அவன் பாண்டிய வம்சத்தைப் பூண்டோடு அழிக்க சபதமிட்டு தனக்கென ஒரு கூட்டத்தைச் சேர்த்துக்கொண்டான். அவனது தந்திரங்கள், கொடூரங்கள் இவற்றை பாண்டிய இளவரசன் முறியடித்தானா? குவளை மாறன் இப்படிப்ப்பட்ட பயங்கரமான சபதம் பூண என்ன காரணம்?

இவற்றை பாண்டிய நெடுங்காவியம் மூன்று பாகங்களும் படித்தால் தெளிவாகப் புரியும். கலைஞர் அவர்கள் நெல்லை மாவட்டத்தில் சங்கரன் கோயில் அருகே இருக்கும் மாங்குடி என்ற ஊரில் சங்கப்புலவர் மாங்குடி மருதனார் என்பவருக்கு நினைவுத்தூண் எழுப்பியிருக்கிறார். அவரே இளவரசன் நெடுஞ்செழியனின் ஆசான் எனக் கொடுத்துள்ளேன். மாங்குடி மருதனார் தான் அப்போதைய தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவர். அவரோடு யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று அறை கூவிய புலவர் கணியன் பூங்குன்றனாரும் ஒரு கதாபாத்திரமாக உலாவுகிறார் இந்தக் காவியத்தில். அதோடு அந்நாட்களில் நம் தமிழ் மண்ணில் நடைபெற்ற வியாபாரங்கள், வெளி நாட்டவரின் வருகை, அவர்களின் நடவடிக்கைகள், நம் மக்களின் பண்பு என பல விஷயங்களையும் ஆராய்ந்து தொகுத்துக் கொடுத்துள்ளேன்.

தமிழர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய காவியம் இது. படித்து விட்டுக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புகளே!


TEN CONTEST 2019 - 20 - Entry # 09

Story Name - Vaanamennum veedhiyile....

Author Name - Srija Venkatesh

Debut writer - No


வானமென்னும் வீதியிலே..... - ஸ்ரீஜா வெங்கடேஷ்

திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கில நாவல் போட்டிக்காக ஸ்ரீஜா வெங்கடேஷ் பகிர்ந்திருக்கும் நாவல்.

Srija VenkateshSrija Venkatesh

Page 3 of 5