பதின் பருவத்தில் செய்த ஒரு தவறு எப்படி வாழ்க்கை முழுமைக்கும் பாதிக்கும் என்பதைக் கூறுகிறது "வானவில்லே! வண்ண மலரே" என்னும் இந்த நாவல்.
நிச்சயம் இதைப் படிக்கும் பதின் பருவ குழந்தைகள் கட்டாயம் இரு முறை எந்த முடிவும் எடுப்பதற்கு முன் யோசிப்பர்கள். தாய் மகள் உறவு, அண்ணன் தங்கை உறவு என பல உறவுகளைப் பற்றிப் பேசும் இந்த நாவல் கீதா என்ற பெண்ணின் துயரக் கதையை ஆண் மகன் ஒருவன் மனது வைத்தால் எப்படி மாற்ற முடியும் என்பதைக் காட்டுகிறது.
வாழ்க்கையில் காதலும் திருமணமும் எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் நட்பு. கீதாவின் இனிய தோழி மாலதி போல நமக்கும் கிடைக்கமாட்டார்களா? என ஏங்க வைக்கும் நட்பைப் பற்றிச் சொல்கிறது "வானவில்லே! வண்ண மலரே!" . தியாகமே வாழ்க்கையாக வாழும் சில தாய்மார்களின் கதையைக் கூறுகிறது. மொத்தத்தில் நமது சமூகத்தில் ஆங்காங்கே ஊடாடும் சில பெண்களையும் ஒரு சில ஆண்களையும் அவர்களது உணர்வுகளையும் வைத்து பின்னப்பட்ட கதை. படித்து விட்டுக் கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்களேன் நண்பர்களே!
ஒவ்வொரு கதையையும் ஒவ்வொரு செட்டிங்கில் எழுதுவது பெரிய சவால் தான்... ஆனால் அந்த சவால் தான் எழுதும் செயல்முறையை எனக்கு இன்னும் எக்ஸ்ட்ரா இன்ட்ரஸ்டிங் ஆக்குவதும் கூட!!! :-)
அப்படி யோசித்து, நான் முன்பு விளையாடிய ஒரு வுமன்ஸ் கிரிக்கெட் லீக் அனுபவத்தை வைத்து எழுதிய ‘கற்பனை’ காதல் கதை தான் இந்தக் கதை!
இது ஒரு ஜாலி கோ ரவுன்ட் கதை :-) ஸ்வரூப் & மதுவின் காதல் கதையை சொல்லும் கதை!
ரொம்ப லாஜிக் எல்லாம் எதிர்பார்க்காதீங்க... :-) ஒரு ஸ்வீட் லவ் ஸ்டோரின்னு நினைச்சுப் படிங்க :-)
முன்னுரை
அநியாயமும் தவறும் நடக்கும் போது அதை சகிக்க முடியாமல் கோபத்தில் பொங்கி எழுந்து அநியாயத்தை சரிசெய்யும் கதாநாயகியால் அவளது குடும்பத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் தர்மம் நியாயம் மற்றும் தனது குணமான கோபத்தையும் யாருக்காகவும் மாற்றிக்கொள்ளாமல் வாழ்கிறாள் நாயகி.
அந்த சமயத்தில் எதிர்பாராத தருணத்தில் அவள் இருக்குமிடம் தேடிவரும் இரு வேறுபட்ட குணங்கள் கொண்ட இரு கதாநாயகர்களுடன் ஏற்படும் இனிப்பும் கசப்புமான நாட்களின் இறுதியில் தனக்கான வாழ்க்கைத் துணையாக இருவரில் எவரை அவள் தேர்ந்தெடுப்பாள் என்பதே இக்கதையாகும்.