Online Books / Novels Tagged : Tamil - Chillzee KiMo

ஊரெங்கும் பூ வாசம்.... - ஸ்ரீஜா வெங்கடேஷ்

நூலைப் பற்றி ...

ஊரெங்கும் பூ வாசம் என்ற இந்த நாவல் நான் என் வாழ்க்கையில் சந்தித்த ஒரு பெண்மணியின் சொந்த அனுபவங்கள்.

இக்கதையின் நாயகியான வடிவு ஆச்சி சாதாரண காய்கறி விற்கும் பெண்மணி. வாழ்க்கையில் பல துன்பங்களையும் சோதனைகளையும் சந்தித்தவள். அவளுக்குத் துன்பங்களைக் கொடுத்தவர்கள் சொந்தக் கணவன், மகன் என்றான போதிலும் அவள் மனம் தளரவில்லை. மகள் அர்ச்சனாவை எப்படியாவது மருத்துவராக்கிப் பார்த்து விட வேண்டும் என்ற அவளது கனவிலிருந்தும் பின் வாங்கவில்லை. "என்னை விட்டுப் பிரியும் போது ஒரே ஒரு ஆண் குழந்தையுடன் தானே இருந்தது. அவன் என் மகன் தினேஷ். ஆனால் இப்போது இப்போது மகள் ஒருத்தி இருக்கிறாளே? அவளை யாருக்குப் பெற்றாய்? என்ற கணவனின் கேள்வியால் உள்ளம் புண் பட்டாலும் உண்மையான பதிலைச் சொல்லவில்லை ஆச்சி.

அர்ச்சனா உண்மையிலேயே யார்? அவளுக்கும் ஆச்சிக்கும் என்ன சம்பந்தம்? என பல கேள்விகள் வருகின்றன இந்தக் கதையில்.

மனிதாபிமானம், இரக்கம், கருணை அதே நேரத்தில் தைரியம், துணிச்சல் இவைகளின் மொத்த உருவம் தான் ஆச்சியும், அர்ச்சனாவும். குடும்பக் கதைகளைக் கூட இத்தனை விறுவிறுப்பாக சொல்ல முடியுமா? என பலரையும் வியக்க வைத்தது இந்த நாவல்.

படித்து விட்டுக் கருத்தைப் பகிருங்களேன் வாசகர்களே!

Published in Books

உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - சசிரேகா

முன்னுரை
தான் தேடும் காதலனே தோழன் என்பதை அறியாத கதாநாயகியும் தன் மேல் பொய்யான பழியை சுமத்தி தண்டனை வாங்கிக் கொடுத்த எதிரிகளை பழிவாங்கத் துடிக்கும் கதாநாயகனும் வாழ்வில் இணைந்தார்களா இல்லையா என்பதே இக்கதையாகும்.

Published in Books

கருவிழியாய் காப்பவனே - ஜெபமலர்

காதல் கதை.
முதல் சந்திப்பே மோதலில் தொடங்க நாயகன் மேல் வெறுப்பு கொள்ளும் நாயகி ஒரு கட்டத்தில் நாயகன் மேல் காதல் கொள்கிறாள். சாதாரணமாக இருந்தவளை சாதனை படைக்க வைத்த நாயகன் வாழ்க்கை பயணத்தில் நாயகியின் காதலை ஏற்றுக் கொண்டானா? என்பதே கதை.

Published in Books

இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - சசிரேகா

முன்னுரை
நிறைய வீடுகள்ல பெண் குழந்தைங்க சின்ன வயசா இருக்கறப்பவே இவன்தான் உன் மாமன் இவனைதான் நீ கல்யாணம் பண்ணிக்கனும்னு சொல்றதும், பையன்கள் கிட்ட இவள்தான் உன் பொண்டாட்டி, இவளைத்தான் நீ கல்யாணம் பண்ணிக்கனும்னு பெரியவங்க சொல்லி வளர்ப்பாங்க, அதே போல பெண் வயதுக்கு வந்தால் அவளுக்கு முறை செய்பவனைத்தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு பெரியவங்க சொல்லி வைப்பாங்க
இதை கேட்டு கேட்டு வளர்ற குழந்தைங்க மனசுல ஆழமா அந்த எண்ணம் பதிஞ்சிடுது, முதல்ல இப்படி சொல்லாம பெரியவங்க வளர்த்திருக்கனும், இல்லைன்னா குழந்தைகள் பெரியவங்களான பின்னாடி பெரிய பிரச்சனைகள் ஏற்படும், இதனால் எத்தனையோ பேர் அவமானப்படறாங்க, சொந்தங்களில் பிளவு ஏற்படுது, அப்படியொரு நிகழ்வினால் உருவாக்கப்பட்ட கற்பனை கதையே இக்கதை. இக்கதையில் வரும் கதாபாத்திரங்கள் யாரையும் குறிப்பிடுபவன அல்ல. இக்கதைக்களம் முழுக்க முழுக்க கற்பனையானது. இக்கதை யார் மனதையும் புண்படுத்த எழுதவில்லை.

Published in Books

ஆனந்தம் எனக்கேது அன்பே நீயில்லாது - சசிரேகா

சசிரேகாவின் புது நாவல். 

Published in Books