Online Books / Novels Tagged : Books - Chillzee KiMo

கனவுப் பூக்கள்... - ஸ்ரீஜா வெங்கடேஷ்

எத்தனை பேர் எப்படிச் சொன்னாலும் அலுக்காத விஷயம் காதல். கனவுப்பூக்கள் என்ற இந்த நாவல் கூட காதலைத்தான் பேசுகிறது.

ஆனால் இது கண்மூடித்தனமான, சுயநலமான காதல் இல்லை. கடமைக்காவும், தாயன்புக்காகவும் காதலை விட்டுக்கொடுக்க முன் வரும் நாயகி அகிலா.

அனாதையான தனக்கு தாயன்பு கிடைக்க வேண்டும் என மகன்களால் கைவிடப்பட்ட வயதான பெண்மணிகளுக்காக இல்லம் நடத்தும் நாயகன் ஆனந்த். தனக்கென ஒரு குடும்பம், மனைவி, அழகான குழந்தை என வாழ ஆசைப்படும் அவன் கனவு.

இந்த இரு வித்தியாசமான இளைஞர்களைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கிறது கனவுப்பூக்கள் நாவல்.

அகிலாவின் தாய் ராதாவுக்கு என்ன பிரச்சனை? அவள் ஏன் காதல் என்றாலே வெறுக்கிறாள்? பயப்படுகிறாள்? அகிலாவின் தந்தை ஏன் அவர்களை விட்டுப் போனார்?

இது போன்ற பல கேள்விகளுக்கு பதிலாக இருக்கிறது கனவுப்பூக்கள் நாவல். படித்து விட்டு உங்கள் கருத்தை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் வாசகர்களே!

   

Published in Books

ரிங்கா ரிங்கா ரோசஸ் - சுபஸ்ரீ முரளி

இரண்டு சிறுமிகள் தங்கள் உயிரை குடித்த  மனித அரக்கனை ஆவியாக உருவெடுத்து பழிவாங்கும் கதை.

Published in Books

நவரசம் - சசிரேகா

சசிரேகாவின் புதிய சிறுகதை. 

 

Published in Books

கஜா - சுபஸ்ரீ முரளி

கஜா துடிதுடிப்பான இளைஞன்.

அவன் மனதைக் கவர்ந்தவள் பொன்னி.

தன்னவளுக்காக அபாயமான முயற்சியில் இறங்குகிறான்.

அப்போது அவன் எகிப்து நாட்டு மர்மம்  மற்றும் அதன் அரசி கிளியோபட்ராவைப் பற்றி அறியும் விசித்திரமான நிகழ்வுகள்,

அவை அவனை எவ்வாறு பாதிக்கிறது என்பதே இக்கதை.

படித்து மகிழுங்கள்

சுபஸ்ரீ முரளி

Chillzee Reviews

Check out the Gaja story reviews from our readers.

  

 

Published in Books

என்னுயிரே என்னை காதல் செய்வாய் - சசிரேகா

முன்னுரை

பாட்டியைத் தேடி திருவனந்தபுரம் வரும் கதாநாயகி சந்திரிகா, அவளின் பாட்டி ஆதித்யன் வீட்டில் இருப்பதை அறிந்து அவளும் அங்கு தங்குகிறாள். ஆதித்யனோடு எற்படும் சண்டை நாளடைவில் காதலான பிறகு ஏற்படும் சின்ன கருத்து வேறுபாட்டால் அவர்களின் காதல் தோல்வி ஏற்படுகிறது. ஆதித்யன் தன்னுடைய மன உளைச்சலை போக்க சென்னை வருகிறான். அங்கு தனது உண்மையான கடந்த கால வாழ்க்கையை அறிந்த ஆதித்யன் விக்ரமனாக தஞ்சாவூருக்குச் சென்று தனக்கு நேர்ந்த அநீதிக்கு உரிய தண்டனை வாங்கித் தருகிறானா? மீண்டும் ஆதித்யனாக திருவனந்தபுரம் வந்து தனது காதலி சந்திரிகாவுடன் குடும்ப வாழ்க்கையில் இணைகிறானா? என்பதே இக்கதையாகும். 

 

Published in Books