Online Books / Novels Tagged : Books - Chillzee KiMo

என் மேல் விழுந்த மழைத்துளியே! - ஸ்ரீஜா வெங்கடேஷ்

காதல் கலந்து சொல்லப்பட்ட நாவல் இது.

இரு இளம் மருத்துவர்கள் விக்னேஷும், சுமதியும். இருவரது கண்ணோட்டங்கள், லட்சியங்கள் எல்லாமே முற்றிலும் மாறானவை. விதி இவர்கள் இருவரையும் திருமணம் என்ற பந்தத்தில் இணைக்கிறது.

இருவரது ஈகோவும் முட்டிக்கொள்கிறது. அவற்றை ரகு என்னும் கயவன் விசிறி விடுகிறான். தனது திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள சுமதியை தன்னுடையவளாக்கிக் கொள்ள என்னென்ன உண்டோ அத்தனையும் செய்கிறான். ஒரு கட்டத்தில் சுமதி அவன் விரித்த வலையில் நன்றாகவே சிக்கிக் கொள்கிறாள். 

அவள் மீண்டாளா? விக்னேஷ் சுமதி திருமணம் நிலைத்ததா? இருவரில் யார் நல்ல மருத்துவர் என்ற கேள்விக்கு விடை கிடைத்ததா?

படித்துப் பாருங்கள் "என் மேல் விழுந்த மழைத்துளியே!" நாவல்!  

Published in Books

உயிர்ப்பேன்???? அன்பே உனக்காக..... - தனுசஜ்ஜு

ஒரு உருக்கமான நட்பில் உருவான காதல். அந்த காதலில் உருவாகும் அண்ணன் தங்கை பாசம். பாசம் உருவாக்கும் போராட்டம். அதை கலைக்கும் நண்பர்களின் துரோகம். துரோகத்தை முறியடிக்கும் அமானுஷ்யம்.

 

Published in Books

மேகமே தூதாக வா! - ஸ்ரீஜா வெங்கடேஷ்

மேகமே தூதாக வா என்னும் இந்த நாவல் சுரேஷ் என்னும் இளைஞனின் காதல் மற்றும் குடும்ப வாழ்க்கையைப் பற்றிப் பேசுகிறது.

அவனது கனவுகள் லட்சியங்கள் எல்லாமே நடுத்தர வர்க்கத்திலிருந்து விடுபட்டு பெரும் பிசினஸ் மேனாக வேண்டும் என்பதே.

அதற்குத்தான் எத்தனை தடங்கல்கள்?

எப்போதும் தாய்ப் பாசம் பெரிதாகப் பேசப்படுகிறது. ஆனால் சில தாய்கள் தங்கள் மகள்களின் மேல் உள்ள பாசத்தில் மகன்களின் மன வருத்தத்தையும், அவர்களது உணர்ச்சிகளையும் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். அவர்களது தேவை எப்போதும் மகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் அதற்கு மகன் துணை நிற்க வேண்டும் என்பதாக இருக்கிறது. இதனால் மகன் மனதில் இருக்கும் ஆசைகளைக் கூட அவர்கள் பொருட் படுத்துவதில்லை. அப்படி ஒரு தாய் தான் சுரேஷின் அம்மா.

அக்கா சிவகாமியின் பொறாமை ஒருபுறம், அவள் கணவன் வாசுவின் பொறுப்பற்ற தன்மை ஒரு புறம் என சுரஷின் வாழ்க்கை பந்தாடப்படுகிறது.

அப்போது தென்றல் போல வந்தவள் தான் விஜி. இவர்களுக்குள் காதல் மலர்கிறது. ஆனால் அது நிறைவேறுமா?

சுரேஷின் கனவான பிசினஸ் தொடங்குவது மெய்ப்படுமா?

இவற்றைத் தெரிந்து கொள்ளப் படியுங்கள் "மேகமே தூதாக வா..." நாவலை. படித்து விட்டுக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் வாசகர்களே!

 

Published in Books

காதலை பெற எத்தனிக்கிறேன் - சசிரேகா

முன்னுரை

வெளியுலகத்திற்கு கணவன் மனைவியாக தெரிபவர்கள் உண்மையில் கணவன் மனைவி அல்ல. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஒரே வீட்டில் வசிக்கும் நிலைமை ஏற்படுகிறது. அவர்களைச் சுற்றியுள்ள மனிதர்களின் எண்ணங்களினால் அவ்விருவரின் வாழ்க்கைப் போக்கு மாறுகிறது. அவ்விருவருக்குள் ஒரு புதிய உறவு உதயமாகிறது. அந்த உறவிற்காக நாயகன் நாயகியின் காதலைப் பெற முயற்சிக்கிறான்.

இறுதியில் இருவரும் வாழ்க்கையில் எப்படி இணைகிறார்கள் என்பதே இந்தக் கதை

 

Published in Books