Online Books / Novels Tagged : Tamil - Chillzee KiMo

ராணி... மகாராணி... - ராசு

அனைவருக்கும் வணக்கம்.

முத்தான எனது பத்தாவது கதையை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள். எனக்கு இது கனவு போலத் தெரிகிறது. இத்தனை கதைகளை நானா எழுதினேன்? ஒரு சில அத்தியாயங்களோடு எழுதுவதற்கு சோம்பேறிப்பட்டுக் கொண்டிருந்த நான் இத்தனை கதைகளை நிறைவு செய்திருந்தால் அப்படி ஆச்சர்யமாகத்தான் இருக்கும்.

வழக்கம் போல் சொல்வதைத்தான் இப்போதும் சொல்கிறேன். இதற்கு எல்லாம் நீங்களும், சில்சீயும்தான் காரணம்.

எப்போதும் போல் இந்த மகாராணிக்கும் உங்கள் ஆதரவை கொடுத்து எனக்கு ஊக்கம் தாருங்கள்.

என்றும் அன்புடன்

ராசு

Published in Books

வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா? - பிந்து வினோத்

இந்த கதையும் ஒரு இனிய, எளியக் காதல் கதை தான்!

Published in Books

பனிப்பாறை - பிந்து வினோத்

திருமண வாழ்க்கை எல்லோருக்கும் எப்போதுமே மகிழ்ச்சியான ஒன்றாக இருப்பதில்லை! நம் பெண்களைப் பொறுத்தவரை திருமணத்திற்கு பின் என் குடும்பம் என்று வட்டத்திற்குள் தங்களை நுழைத்துக் கொள்பவர்கள் அதிகம்.

இந்த கதையின் கதாநாயகி கல்பனாவும் அப்படி தான்! கணவன் - குழந்தைகள் என்று ஒரு சிறிய வட்டத்திற்குள் வாழ்கிறாள். அவளின் நம்பிக்கையை உடைத்து அவளின் கணவன் அவளை கைவிடும் போது, இலகுவான தண்ணீர் எப்படி டைட்டானிக் போன்ற பெரிய கப்பலை கவிழ்க்கும் பனிப்பாறையாக மாறுகிறதோ அதேப் போல தன் நிலையில் இருந்து மீண்டு எழுந்து வருகிறாள்!

பொதுவாக சந்தோஷமான கதைகளையே எழுதி பழக்கப் பட்டு போயிருந்த எனக்கு கல்பனாவை இப்படி ஒரு நிலையில் விட மனம் வரவில்லை... அதனால் தான் இதே கதைக்கு சந்தோஷமான alternate version ஒன்றும் கொடுத்தேன்.

ஆனால் இந்த கல்பனா... அவளின் வலி... அதிலிருந்து மீண்டு எழுந்து வரும் அவளின் வலுவான ஆளுமை என்னையே ஆச்சர்யப் படுத்தி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்!

Published in Books



பூங்கதவே தாள் திறவாய்... - பத்மினி செல்வராஜ்

முன்னுரை:

Hi Friends,

இதுவரை தொடர்கதை எழுதிய நான் முதல் முறையாக ஒரு நாவலை எழுதலாம் என்று முயற்சி செய்திருக்கிறேன்... தொடர்கதை எழுதுவதற்கும் ஒரு நாவலை ஒரே நேரத்தில் எழுதுவதற்கும் பெரிய வித்தியாசங்கள்...

ஆனாலும் முடிந்த அளவுக்கு சுவாரஸ்யமாக கொண்டு செல்ல முயன்றிருக்கிறேன்...

கதையை பற்றி??

என்ன கதை என்று தெரியாமல் படிப்பதும் ஒரு சுவாரஸ்யமே..!!! அதனால் என்ன கதை இது என்று கதையை படித்து பாருங்கள்...இதுவும் ஒரு இனிய காதல் கதைதான்...

உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்..படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்...Happy Reading !!!

Published in Books

அ... ஆ... இ... ஈ...

இது ஒரு சிம்பிள் லவ் story :-) 

நமக்கு பிடிக்குதோ பிடிக்கலையோ, தெரியுதோ தெரியலையோ வாழ்க்கையில நடக்குற ஒவ்வொரு சின்ன சின்ன விஷயத்துக்கு பின்னாலேயும் ஒரு பெரிய கனக்ஷன் இருக்குன்னு அப்பப்ப தோணும்...

அப்படி சிலர் வாழ்க்கையில நடக்கும் நிகழ்வுகள் அவங்களுக்கே தெரியாமல் எப்படி மற்றவர்களை தாக்கம் செய்கிறது என்பது தான் இந்த சிம்பிள் கதையின் ஒன் லைன் கரு :-)

Things we lose have a way of coming back to us in the end...!

ஃபீல் குட் லவ் ஸ்டோரி! படித்து மகிழுங்கள்!

Published in Books