Bindu Vinod

Bindu Vinod

Social Profiles

Facebook Instagram Twitter Messenger (by Facebook) Pinterest

விளக்கேற்றி வைக்கிறேன்... - பிந்து வினோத்


 

Other editions available!!! Click here to view other editions of this book.

ஹாய் ஃபிரென்ட்ஸ், 'உன்னைத் தானே' கதையுடைய ஒரிஜினல் எடிஷன் இது. இந்த வெர்ஷனுக்கும், "உன்னைத் தானே" வெர்ஷனுக்கும் சின்னதாக சில வித்தியாசங்கள் இருக்கிறது.  என் பிரென்ட்ஸ் சிலருக்கு இந்த வெர்ஷன் பிடிக்கும். அதற்காக இதையும் பப்ளிஷ் செய்கிறேன். ஒருவேளை நீங்கள் "உன்னைத் தானே" கதையை படித்திருந்தால், என்ன வித்தியாசம் என்று தெரிந்துக் கொள்ள படியுங்கள், அல்லது ஸ்கிப் செய்து விடுங்கள் :-) நன்றி!

 

கதையைப் பற்றி:

கிராமத்து இளைஞன் சசி, சென்னையில் சிந்துவை பார்த்த உடனே காதல் கொள்கிறான்.

சிந்துவிற்கு திருமணம் நிச்சயமாகி இருப்பதை தெரிந்து சசி வருத்தம் அடையும் போதே, எதிர்பாராத விதமாக அவளை திருமணம் செய்துக் கொள்ளும் வாய்ப்பு அவனுக்கு கிடைக்கிறது. அதைத் தவறாமல் பயன்படுத்தியும் கொள்கிறான்.

ஆனால் அந்த திருமணம் சிந்துவிற்கு பிடிக்குமா? அவனின் பெற்றோர் அதை ஏற்றுக் கொள்வார்களா??

தெரிந்துக் கொள்ள கதையை படியுங்கள்!

Chillzee Reviews

Check out the Vilaketri vaikkiren story reviews from our readers.

  

 

ரோஜா மலரே ராஜக்குமாரி...! - பிந்து வினோத்

Chillzee Princess Series - 01 - Princess Rohini.

இளவரசி ரோஹினி பிடிக்காத திருமணத்தில் இருந்து தப்பிக்க சென்னைக்கு வருகிறாள். அங்கே தான் யார் என்று சொல்லாமல் சாரதாவின் வீட்டில் தங்குகிறாள். அப்போது சாரதாவின் மகன் அஜய் மீது காதல் வசப் படுகிறாள். அவள் யார் என்ற உண்மை தெரிந்தால் அஜய் என்ன நினைப்பானோ என்ற கலக்கத்தில் உண்மையை சொல்லாமல் மறைக்கிறாள். அவள் பயத்தை நிஜமாக்குவதுப் போல அவள் மறைத்து வைத்த அரச வாழ்வு அவளை தேடி வந்து சேருகிறது.

அஜய்க்கு உண்மை தெரிந்ததா? ரோஹினி அரசக் குடும்பத்திற்கான கடமையை ஏற்றுக் கொள்வாளா அல்லது அஜய் மீதான காதலை தொடர்வாளா?

 

எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - பிந்து வினோத்

 

Dedication

இந்தக் கதை,

தொடர்ந்து எழுத எனக்கு ஆதரவும், ஊக்கமும் தந்து வரும் chillzee வாசகர்களுக்கும்,

எப்படிப்பா இப்படி’ என யோசிக்க வைக்கும் விதமாக வித்தியாசமாக எதையும் செய்யும் என் இனிய சக chillzee டீம் மக்களுக்கும்

சமர்ப்பணம்!!!!

 

கதையைப் பற்றி:

இது ஒரு ‘டெலிபதி’ காதல் கதை!!!!

 

கதையைப் பற்றி ஒன் லைனரில் சொல்ல வேண்டும் என்றால்,

கார்த்திக் – அத்விதா திருமணம், கடைசி நிமிடத்தில் அத்விதா வேண்டாம் என்று சொல்வதால் நின்றுப் போகிறது. எதனால் அத்விதா கல்யாணம் வேண்டாம் என்று சொன்னாள் என்று தெரிந்துக் கொள்ள முயலுகிறான் கார்த்திக்.

அதில் வெற்றிப் பெற்றானா, அவர்கள் திருமணம் நடந்ததா என்பதை தெரிந்துக் கொள்ள கதையைப் படியுங்கள்!

Chillzee Reviews

Check out the Enge en kadhali? Enge...? Enge...? novel reviews from our readers.

  

 

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்... - பிந்து வினோத்

தன்னைப் பற்றி எந்த நினைவும் இல்லாமல் இருக்கும் நிலா, வெற்றி - மிருதுளா தம்பதிகளின் அரவணைப்பில் வாழ்கிறாள்.

திடீரென ஒரு நாள் அவளுடைய பழைய வாழ்க்கையின் உறவுகள் அவளை அங்கே கண்டுபிடித்து வருகிறார்கள். அவளுக்கு திருமணமாகி இருப்பது தெரிந்து நிலாவிற்கு அதிர்ச்சியாக இருக்கிறது.

அவளுடைய 'பழைய' கணவன் தியாகராஜன் அவளிடம் பாராமுகமாக இருக்கவும், நிலா குழம்பிப் போகிறாள். அதுவும் அவனே விரும்பி காதலித்து அவளை மணம் புரிந்தான் என்பது தெரிய வரவும் அவளுடைய குழப்பம் அதிகமாகிறது. என்ன நடந்தது என்று தெரிந்துக் கொள்ள முயற்சி செய்கிறாள்.

காதலித்து திருமணம் செய்துக் கொண்ட தியாகு ஏன் அப்படி நடந்துக் கொள்கிறான்? நிலாவிற்கு பழைய நினைவுகள் திரும்பியதா? பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தார்களா?

கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

உயிர் கேட்கும் அமுதம் நீ...!

Other editions available!!! Click here to view other editions of this book.

Chillzeeயில் தொடர்கதையாக வெளி வந்த போது பெரும் வரவேற்பை பெற்ற கதை இது.

மூன்று தோழிகள் - அவர்களின் நட்பு - தனிப்பட்ட வாழ்வில் மலரும் காதல் - குடும்பம் - என மூன்று தோழிகளையும், அவர்களின் குடும்பத்தினரையும் சுற்றி நகரும் காதல் கதை!