அனைவருக்கும் வணக்கம்.
காதலே கூடாது என்ற கட்டுக்கோப்புடன் வளரும் நாயகன் ராஜ்பரத் விதிவசத்தால் காதல் வயப்படுகிறான். ஆனால் அவன் காதல் மறுக்கப்படுகிறது.
பெற்றோரின் நிம்மதிக்காக திருமணம் செய்து கொள்ள, அவன் விருப்பமின்மை தெரிந்து திருமணத்தன்றே மணப்பெண் அவனை விட்டு விலகுகிறாள்.
அதன் பிறகு என்ன நடந்தது? மனைவியுடன் சேர்ந்தானா? காதலியைக் கைப்பிடித்தானா? இல்லை வேறொரு வாழ்க்கை அமைந்ததா? தெரிந்து கொள்ள கதையைத் தொடர்ந்து வாசியுங்கள்.
என்றென்றும் அன்புடன்
ராசு
முன்னுரை
நாயகனை கண்ட ஒரு நொடியில் காதல் வயப்படும் நாயகி அவனை தேடி சென்று தன் காதலை அவன்மீது பொழிகிறாள். இதில் நாயகனின் காதலுக்காக ஏங்கும் நாயகிக்கு அவளின் காதல் கிடைத்ததா என்பதே இக்கதையின் கருவாகும்.
முன்னுரை:
வாழ்க்கையில் நாம் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று என்பது எல்லாருக்கும் மிகவும் சாதாரணம்.
படிப்பைத் தவிர வேறொன்றும் என் நினைவில் இல்லை, நான் காதல் வசப்படமாட்டேன் என்னும் மனவுறுதி கொண்ட ரம்யா என்ற இளம்பெண்ணும், தனக்கே அவள் உரிமையானவள் என்னும் கண்மூடித்தனமான காதல் கொண்ட தினேஷ் என்ற இளைஞனும் அவர்களின் கல்லூரி நாட்களில் நடத்தும் கண்ணாமூச்சி ஆட்டம் தான் “இது ஒரு காதல் கதை” .
முதல் பகுதியில் சந்தர்ப்பவசத்தால் அவர்களின் காதல் இருவரும் சொல்வதற்குள் பிரிந்து விட்டது போல் அமைந்துவிட்டது. ஆனால் அவர்கள் இருவரும் காதலை ஒத்துக் கொண்டு காதலித்து இருந்தால் அவர்களின் கல்லூரிக்காலம் எப்படி இருந்திருக்கும் என்பதே இந்த இரண்டாவது பாகம்.
கதையில் வரும் பெயர்களும், சம்பவங்களும் யாரையும் குறிப்பிடுவன அல்ல.
என்னுடைய இந்த முதல் நாவலை மறைந்த எழுத்து சித்தர் பாலகுமாரன் அவர்களுக்கு காணிக்கையாக்குகிறேன்.
குருவே நின் திருவடி சரணம்!!!
- விஜயகுமாரன்
திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கில நாவல் போட்டிக்காக விஜயகுமாரன் பகிர்ந்திருக்கும் நாவல்.