Sasirekha

Sasirekha

பூ முக மாது - சசிரேகா

மீன் கொடி பறக்கும் பாண்டிய நாட்டின் பெருமை அனைவரும் அறிந்ததே. பாண்டிய நாட்டு மக்களின் வீரமும், காதலும் இன்றும் பலர் மனதில் நீங்கா இடத்தை பிடித்திருக்கும். கல்வெட்டில் பொறிக்கப்பட்ட காதல் கதையும் வீரக்கதையும் பல இருந்தாலும் என்றுமே அது அழியாதது.

மன்னர்களுக்கும் இளவரசர்களுக்கும் மட்டுமே காதலும் வீரமும் இருந்ததில்லை கல்வெட்டிலும் வரலாற்றிலும் சொல்லப்படாத எத்தனையோ மனிதர்களின் எளிமையான காதலும் வீரமும் கணக்கில் அடங்காமல் இருந்தன். அதில் ஒரு வெண்முத்தைப் போன்ற கல்வெட்டில் பொறிக்கப்படாத எளிமையான ஒரு படைவீரனின் வீரமும் அவனின் காதலும் பற்றின கற்பனை கதை இது.

 

என்னமோ ஏதோ சிக்கித்தவிக்குது மனதில் - சசிரேகா

முன்னுரை:

மீன் சம்பந்தப்பட்ட தொழிலை ஆதாரமாக வைத்து வாழ்க்கையை ஓட்டும் நாயகனுக்கும் ஆச்சாரமான குடும்ப பின்னனியில் இருந்து வந்த நாயகிக்கும் நடுவில் ஏற்படும் கலப்படமான நிகழ்வுகளால் இறுதியில் இருவருக்குள்ளும் காதல் பிறந்ததா? என்பதே இக்கதையின் கருவாகும். 

கதையில் வரும் நாயகி ஆச்சாரமான குடும்ப பெண் என்பதால் அவர்கள் பேசும் மொழி சரியாக எழுத வராத காரணத்தால் சாதாரண வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளேன். அதே போல நாயகனின் தொழில் சம்பந்தப்பட்ட பேச்சுகளிலும் சாதாரண வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளேன். மன்னிக்கவும்.

இக்கதையில் குறையிருப்பின் சுட்டுக்காட்டுங்கள் எனது மற்ற கதைகளை போல இக்கதையையும் ஆதரவளியுங்கள். நன்றி.