Online Books / Novels Tagged : Chillzee_Originals - Chillzee KiMo

இது தான் காதலா?! - பிந்து வினோத்

இது ஒரு காதல் கதை ஃபிரென்ட்ஸ்!

என்ன, வித்தியாசமாக திருமணத்திற்குப் பின் வரும் காதலை சொல்லும் கதை!

பலக் கதைகள் எழுதினாலும் சில கதைகள் மனதிற்கு நெருக்கமானவை! அப்படி எனக்கு பிடித்த ஒருக் கதை இந்தக் கதை. படித்து ரொம்ப நாட்கள்... ஹுஹும் வருடங்கள் ஆகி விட்டது...!!!! மீண்டும் படித்தப் போது முதல் முறை எழுதி முடித்தப் போது ஏற்பட்ட அதே ஃபீல்! அதே ஸ்மைல்!

உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன் :-) 

 

Published in Books

உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன்... - பிந்து வினோத்

Second edition!!!!!

இது 'உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன்...' நாவலின் இரண்டாம் பதிப்பு.

முதல் பதிப்பில் இருந்து பல விதமான மாற்றங்கள் மற்றும் பல பிழைத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

நன்றி!!

 

கதையைப் பற்றி:

மிகவும் துடிதுடிப்பான இளைஞனனான சுபாஷ் கல்லூரி முடித்தது முதல் தன கிராமமே உலகம் என்று தன்னை சுருக்கி கொண்டு வாழ்கிறான். அவனுக்கு திருமணம் என்ற பேச்சு தொடங்கும் போது வேண்டவே வேண்டாமென்று மறுக்கிறான்.

சுபாஷின் தம்பி மகேஷ் காதலித்து ப்ரியாவை திருமணம் செய்துக் கொள்கிறான். சுபாஷினால் மகேஷும், அவனுடைய அம்மாவும் வருத்தப் படுவதைப் பார்த்து சுபாஷ் எதனால் இப்படி இருக்கிறான் என்று கண்டுப்பிடிக்க முயல்கிறாள் ப்ரியா.

சுபாஷிற்கு திருமணம் செய்து வைத்தே தீருவேன் என்றும் பிடிவாதம் செய்கிறாள்.

ப்ரியாவின் பிடிவாதம் வென்றதா? சுபாஷின் கல்லூரி வாழ்வில் இருக்கும் ரகசியம் என்ன?  அதை மகேஷும், ப்ரியாவும் கண்டுப்பிடித்தார்களா??

தெரிந்துக் கொள்ள இந்த காதல் கதையை படியுங்கள்!!

Published in Books

TEN CONTEST 2019 - 20 - Entry # 21

Story Name - En mel undranukkethanai anbadi

Author Name - Sasirekha

Debut writer - No


என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - சசிரேகா

முன்னுரை

தன் கணவன் காணாமல் போய்விட்டான் என சொல்லும் மனைவி ஆனால் உலகமோ அவளின் கணவன் இறந்துவிட்டதாக சொல்கிறது. இதில் எதிரும் புதிருமாக வாழ்ந்த நாயகிக்கும் நாயகனுக்கும் இடையில் உருவான காதலும் அதை அவர்கள் உணர்ந்து இருவரும் இணைவதற்குள் நாயகன் இறந்துவிட்டதாக சொல்ல அதை நம்பாத நாயகி தன் கணவனை தேடுகிறாள் அவ்வாறு தேடும் போது தன் கணவனைப் பற்றியும் அவனது வாழ்வில் ஒளிந்திருக்கும் ரகசியங்களைப் பற்றியும் தெரிந்துக் கொண்டபின் அவளின் வாழ்க்கையே திசை மாறுகிறது ஆனாலும் உலகத்தையே எதிர்த்து தன் கணவனை தேடும் முயற்சியில் இறங்குகிறாள் இறுதியில் அவள் தன் கணவனை கண்டுபிடித்தாளா இல்லையா என்பதே இக்கதையின் கருவாகும்.

Chillzee Reviews

Check out the En mel undranukkethanai anbadi story reviews from our readers.

  

 

Published in Books

TEN CONTEST 2019 - 20 - Entry # 17

Story Name - Un nesam en suvasam

Author Name - RaSu

Debut writer - No


உன் நேசம் என் சுவாசம் - ராசு

திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கில நாவல் போட்டிக்காக ராசு பகிர்ந்திருக்கும் நாவல்.

Published in Books

மதியூர் மிஸ்ட்டரீஸ் - 01 - உன்னை கண் தேடுதே...! - Chillzee Originals

சமர்ப்பணம்:

பெண்களை முன்னிலைப் படுத்தி பேமிலி - ரொமான்ஸ் - த்ரில்லர் - மிஸ்டரி நாவல்கள் எழுதி, எங்களையும் இந்தக் கதையை எழுத தூண்டிய மறைந்த 'மேரி ஹிக்கின்ஸ் கிளார்க்' அவர்களுக்கு இந்த நாவல் எங்களின் அன்பு சமர்ப்பணம்!

 

கதையைப் பற்றி:

'கண்ணால் காண்பது பொய்' என்பது எப்போதும் உண்மையா?

ஊர் முழுதும் தவறாக பேசும் அஹல்யாவை நல்லவள் என்று நம்புகிறான் அபினவ். அவளை திருமணம் செய்துக் கொள்ளவும் விரும்புகிறான்.  எதனால் அஹல்யாவை பற்றி தவறான செய்தி பரவியது என்று அவன் கண்டுப்பிடிக்க உதவுகிறாள் சத்யா. அவளுடைய புதிய தோழி சக்தியும் அவளுக்கு உதவுகிறாள். அஹல்யா உண்மையில் நல்லவள் தானா?

நம் கதாநாயகிகளுடன் பயணம் செய்து நாமும் தெரிந்துக் கொள்வோம்.

இது ஒரு குடும்பம் - காதல் -  மர்மம் நிறைந்த கதை!

Published in Books