அன்பான வாசகர் தோழமைகளே!!!
அனைவருக்கும் வணக்கம்..! ஒரு புதிய கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன்.
வழக்கமான கதைகளில் வரும் ஹேன்ட்ஸமான மல்ட்டி மில்லினர் நாயகனும் , அதீத அழகுடைய மத்தியதரத்து நாயகியும் இல்லாமல், நம் பக்கத்து வீட்டில் வசிக்கும் ராசய்யாவும், பூங்கொடியும் தான் இந்த கதையின் நாயகன், நாயகி.
நன்றாக ஒற்றுமையாக இருக்கும் குடும்பத்தை எப்படி கலைப்பது?...தன் எதிரிக்கு எப்படி குழி பறிப்பது? கணவன் மனைவி இடையே எப்படி வில்லங்கத்தை கொண்டு வருவது?
என்று ரூம் போட்டு யோசிக்கும் வில்லனோ, வில்லியோ இல்லாமல், எதார்த்தமான ஒரு கிராமத்து ஜோடியின் காதல் கதை…!
இந்த கதை 1999 ஆம் ஆண்டு கால கட்டத்தில் நடந்த கதையாக பாவித்து படியுங்கள்.
இதுவும் உங்கள் மனதுக்கு பிடித்த இனிமையான, கலகலப்பான, ஜாலியான காதல் கதைதான். படித்துவிட்டு மறக்காமல் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். Happy Reading!!!- அன்புடன் பத்மினி செல்வராஜ்!
Chillzeeயில் தொடர்கதையாக வெளி வந்த போது பெரும் வரவேற்பை பெற்ற கதை இது.
மூன்று தோழிகள் - அவர்களின் நட்பு - தனிப்பட்ட வாழ்வில் மலரும் காதல் - குடும்பம் - என மூன்று தோழிகளையும், அவர்களின் குடும்பத்தினரையும் சுற்றி நகரும் காதல் கதை!
முன்னுரை:
Hi Friends,
அனைவருக்கும் வணக்கம்....
எழுத்துலகில் எனது முதல் தொடர்கதையான “என் மடியில் பூத்த மலரே” க்கு ஆதரவு அளித்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!!
நீங்கள் அளித்த ஆதரவு+ஊக்கத்தால் எனது அடுத்த கதையான “காதோடுதான் நான் பாடுவேன்...” உடன் உங்களை மீண்டும் சந்திக்க நானும் மை பெஸ்ட் பிரெண்ட் வேல்ஸ் ம் வந்திருக்கிறோம்...
கதையை பற்றி ?
தன் பக்தையின் குறையை தீர்க்க நம்ம வேல்ஸ் ஒரு திட்டம் போட்டு கட்டம் போட்டு விளையாடப் போகிறான். அவனை எதிர்த்து ஒரு போட்டியாளரும் களம் இறங்க, அந்த போட்டியாளரை வென்று அந்த சிங்காரவேலன் தன் ஆட்டத்தில் வெற்றி பெறுவானா? அந்த வேலனையே எதிர்த்து நிற்கும் அந்த போட்டியாளர் யார்? என தெரிந்து கொள்ள இந்த கதையை படியுங்கள்..
இதுவும் உங்கள் மனதுக்கு பிடித்த இனிமையான காதல் கதை.. Happy Reading!!
நந்தினி - தன் குடும்ப சூழ்நிலைகளால் தன்னை சுற்றி ஒரு தனிமை வட்டம் அமைத்துக் கொண்டு, வேலையில் தன்னை ஆழ்த்திக் கொண்டிருப்பவள்!
அவளின் வாழ்வில் இனிய சூறாவளியாய் நுழைந்து, அவளின் மனதைக் கொள்ளைக் கொள்கிறான் எஸ்.கே எனும் சதீஷ் குமார்!
நந்தினி தன் காதலை மனதினுள் வளர்த்துக் கொண்டே செல்ல, அந்த காதலின் பிரதிபலிப்பு சதீஷிடமும் இருக்குமா அல்லது அது வெறும் நட்பு மட்டும் தானா??
சதீஷின் வாழ்வில் எட்டிப் பார்க்கும் மீரா யார்? அவளுக்கும் சதீஷிற்கும் நடுவே இருக்கும் உறவு என்ன?
நந்தினியின் காதல் வெற்றி பெற்றதா???
கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!
எளிமையான ஆனால் இனிமையான காதல் கதை.
குடும்பம் - காதல் சார்ந்த பொழுதுபோக்கு + ஜனரஞ்சக கதை.
நந்தினி - மிடில் கிளாஸ் பேமிலியை சேர்ந்தவள். அம்மா, தங்கை, தம்பி எனும் அன்பான குடும்ப வட்டத்தில் வாழ்பவள்.
எஸ்.கே (எனும்) சதீஷ் குமார் - பணக்காரன், வாழ்க்கையை அதன் பாட்டில் ஜாலியாக ரசிப்பவன்.
எஸ்.கேவும் நந்தினியும் சந்தித்தால் என்ன ஆகும்?
Opposite poles attract each other எனும் Laws of attraction உண்மை தானா???
கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!!