Online Books / Novels Tagged : Novel - Chillzee KiMo

இதயத்திலே ஒரு கனவு - Chillzee Originals

பத்து வருடங்களுக்கு முன் ஜெய் மீதான தன் காதலை வேண்டாம் என்று மறுத்து விட்டாள் புவனேஸ்வரி.

இருவரும் மீண்டும் சந்திக்கும் போது அவர்கள் இருவரின் நிலையும் தலைக் கீழாக மாறி இருக்கிறது. புவனேஸ்வரி இப்போதும் தன் மனதில் கனவாக ஜெய் மீதான காதலை தொடர்ந்துக் கொண்டே இருக்கிறாள். ஆனால் ஜெய் அவள் பக்கமே வராமல் தவிர்க்கிறான். 

தடுமாறும் மனநிலைக் கொண்டு, தன்னையும் தன் காதலையும் வேண்டாம் என்ற புவனேஸ்வரி தனக்கும் வேண்டாமென்று என்று ஜெய் இப்போது நினைக்கிறான்.

புவனேஸ்வரியின் மனதில் இருக்கும் காதலும், ஜெய்யின் மனதில் இருக்கும் கோபமும் நேருக்கு நேர் மோதும் போது, எது ஜெயிக்கும்? காதலா, கோபமா?

  

Published in Books

மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - சசிரேகா

முன்னுரை
அக்காவின் திருமண வாழ்க்கை சரியாக அமைய வேண்டுமென நினைக்கும் நாயகிக்கு அவளின் அக்காவின் மூலம் சர்ப்ரைஸாக நடக்கும் நாயகியின் திருமணம், குழப்பத்தில் உருவான அத்திருமண பந்தத்தை நாயகி மற்றும் நாயகன் ஏற்றுக் கொண்டு வாழ்ந்தார்களா அவர்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளே இக்கதையாகும்.

 

Published in Books

நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - சசிரேகா

முன்னுரை
அநாதைகளாக விடப்பட்ட நாயகன் மற்றும் நாயகியின் வாழ்வில் நடக்கும் இன்னல்களும் துன்பங்களும் மகிழ்ச்சியும் காதலும் அடங்கிய கதையிது. உணர்வுகள் சம்பந்தப்பட்ட கதை என்பதால் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் இது ஒரு கற்பனை கதை

 

Published in Books

என்னுயிரே நீதானோ? - Chillzee Originals

 சிவா, அபிலாஷ், தீபக் மூவரும் நெருங்கிய நண்பர்கள். சிறுவனாக இருந்தப் போது சந்தித்த மன அதிர்ச்சியினால் சிவா பொதுவாக பாதுகாப்பற்ற உணர்வுடனே இருக்கிறான். இதனால் அபிலாஷ், தீபாக் தாண்டி யாருடனும் சிவா நெருங்கி பழகுவதே இல்லை.

அப்படிபட்டவன் மேனகாவை பார்த்த உடன் காதல் வசப்படுகிறான். மேனகாவும் அவனை விரும்புகிறாள்.

ஆனால், சிவாவின் மன சிக்கலை பயன்படுத்திக் கொண்டு  அவர்கள் இருவரையும் பிரிக்க முயற்சிக்கிறான் கோபால்.

கோபாலின் சதி வெற்றிப் பெற்றதா? அல்லது சிவா - மேனகா காதல் வெற்றி பெறுமா? 

Published in Books

ஸ்வேதாவின் ராகுல் - பிந்து வினோத்

ஸ்வேதா இன்றைய கால நவீன யுவதி. எதையுமே சீரியசாக யோசிப்பவள்.

ராகுலும் இளைஞன். ஆனால் வாழ்க்கையை ஈசியாக எடுத்துக் கொள்பவன்.

ஸ்வேதா, ராகுல் இருவரும் மனதுக்குள் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். அந்தக் காதலை வெளியில் சொல்ல தயங்குகிறார்கள்.

ஈகோ, தவறான புரிதல் அனைத்தையும் தாண்டி இந்த காதலர்களின் காதல் வெற்றிப் பெறுமா?

 

Published in Books